Sunday 21 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(18)

மரணித்தார்-
முத்தலிபு!

"பொறுப்புகளை"-
ஏற்றார்-
அப்துல் முத்தலிபு!

அப்துல் முத்தலிபுவின்-
காலத்தில்-
இரு சம்பவங்கள்-
நடந்தது!

அது-
முக்கியத்துவங்கள்-
வாய்ந்தது !

ஒன்று-
ஜம் ஜம் கிணறு-
பற்றியது!

அக்கிணறு-
சில காரணங்களால் -
மூடி இருந்தது!

பிறகு-
அப்துல் முத்தலிபுவிற்கு-
தெரிய வந்தது!

கனவில்-
கண்டார்!

இடத்தை-
அறிந்து-
கிணற்றை -
புதுபித்தார்!

ஜம் ஜம் கிணறு-
இஸ்மாயில் (அலை)-
காலத்து-
நீரூற்று!

இதுவரைக்கும்-
நீடிக்கும்-
அருளூற்று!

முக்கியத்துவம்-
மற்றொன்று-
காபத்துல்லாவை-
பற்றியது!

அப்ரஹா என்ற-
அதிகாரத்தில் இருந்தவனுக்கு-
ஒரு எண்ணம்-
இருந்தது!

யானை படையை-
காபத்துல்லாவை-
உடைத்திட -
அனுப்பினான்!

பறவை கூட்டத்தை-
சிறு சிறுகற்களுடன்-
அனுப்பினான்-
இறைவன்!

யானை படை-
தின்று  துப்பிய-
வைக்கோல்-
 போலானது!

வந்தவனுக்கும்-
மரணம்-
சம்பவித்தது!

அப்துல் முத்தலிபுவிற்கு-
பதினாறு பிள்ளைகள்!

பத்து ஆண்கள் !
ஆறு பெண்கள்!

மகன்களில்-
ஒருவர்-
அப்துல்லா ஆவார்!

அவர்-
ஆமினாவை-
மணந்தார்!

இனிமையாக-
கழிந்தது-
இல்லற வாழ்கை!

ஆனால்-
நீடிக்கவில்லை-
அவ்வாழ்க்கை!

பேரீத்தம் பழம் வாங்க-
மதினாவிற்கு-
அப்துல்லா சென்றார்!

சென்றவர்-
"சென்றே " விட்டார்!

(தொடரும்....)

//ஜம் ஜம் நீர்பற்றிய ஒரு குறுஞ்செய்தி-
""zam zam"is 18#14 ft &13 mtrs deep well.It started 4000 years ago.Never dried since then.Never changed its taste.No Algae or plant growth in the pond.Hevey motors pulling 8000 litres per second &after 24hrs, it completes its level in only 11 mins.thus its water level never.
இத்தகவலை அனுப்பிய சகோதரர்.ஜலால் அவர்களுக்கு நன்றி//




2 comments:

  1. அப்துல்லா வாழ்க்கை துயரம்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. ஜம் ஜம் நீரூற்று குறித்த
    அடிக்குறிப்பைப் படிக்க ஆச்சரியம் மேலிட்டது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete