Monday 1 July 2013

பிரவீன்!

பிரவீன்!

நீ-
ஒரு வீரன்!

பலரது-
வாழ்வு-
அர்த்தமற்றது!

சிலரது-
மரணமோ-
அர்த்தம் பொதிந்தது!

உத்தரகாண்டில்-
ராணுவ சீருடை அணிந்து-
மக்களை காப்பாற்றினாய்!

ஏனோ!?-
விமானவிபத்தில்-
உயிரிழந்தாய்!

நீ!
தேச பணியில்-
உயிரை விட்டது!

இன்று-
உன் குடும்பத்திற்கு-
தேசமே கடன்பட்டு-
நிற்கிறது!


4 comments:

  1. உண்மை...

    வீர வணக்கங்கள்...!

    ReplyDelete
  2. அருமையான அஞ்சலி கவிதை! உயிர் தந்த வீரனுக்கு வீர வணக்கங்கள்!

    ReplyDelete
  3. வீரம் சுமந்த நெஞ்சு.
    மௌனம் கலந்த அஞ்சலி!

    ReplyDelete