Tuesday 16 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (13)

அன்றைய-
அரபு தேசம்!

புழுதி காற்று மட்டுமா!?-
வீசும்!

அனாச்சாரங்கள்-
பெருகிய நிலை!

அறியாமைகள்-
குடிகொண்ட-
நிலை!

இப்ராஹிம்(அலை)-
இஸ்மாயில் (அலை)-
வாழ்ந்த இடம்!

அவர்களின்-
சந்ததிகளும்-
வசித்த இடம்!

"அவர்கள்"-
சொல்லி சென்ற-
மார்க்கம்!

மாசுபடிய-
செய்துவிட்டது-
மக்களோட-
பழக்க வழக்கம்!

அன்றைக்கு-
"குஜா ஆ இப்னு அம்ரு"-என்பவன்-
இருந்தான்!

அவன்-
இறை நேசர் போல-
மதிப்புடன்-
இருந்தான்!

ஒரு முறை-
ஷாம் தேசம்-
சென்றான்!

அங்கு-
"ஹுபுல் "-எனும்
சிலையை-
அத்தேச மக்கள்-
வணங்கிட கண்டான்!

அது போன்ற-
சிலையை-
அவனும்-
காபதுல்லாவில்-
முதன் முதலில்-
நிறுவினான்!

மக்களையும்-
அதனை-
வணங்கிட-
அழைத்தான்!

வெளியிலிருந்து-
சிலை வணக்கம்-
இறக்குமதியானது!

இங்கிருந்தும்-
இப்பழக்கம்-
ஏற்றுமதியானது!

ஊரு ஊருக்கு-
சிலை!

குலத்திற்கு-
ஒரு சிலை!

அம்மக்கள்-
கையில்-
 ஒரு சிலையை-
வைத்திருக்கும்போது!

எறிந்திடுவார்கள்-
அதை விட-
அழகான-
சிலை கிடைக்கும்போது!

மண்ணை குவித்தும்-
வணங்கினார்கள்-
சிலையேதும்-
கிடைக்காதபோது!

லாத்-
தாத்த இர்-
உஜ்ஜா-
இச்சிலைகள் -
பிரபலமானது!

காலம்-
ஆக ஆக!

மக்களும்-
நம்பிவிட்டார்கள்-
இதுதான்-
இப்ராஹிம் (அலை)-கொண்டுவந்த
மார்க்கமாக!

(தொடரும்.....)


4 comments:

  1. அறிந்தேன்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. அறியாத தகவல்! அறிந்துகொண்டேன்! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  3. அறியாத தகவல்கள்.... தொடருங்கள்....

    ReplyDelete
  4. அறியாத பல தகவல்கள் அறிந்து
    தொடர்கிறேன்

    ReplyDelete