Saturday 27 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (24)

முஹம்மது (ஸல்)-அவர்கள்
சமூக அவலங்களால் -
அவஸ்தைக்கு உள்ளானார்கள் !

தவறு செய்வதை கண்டு-
தத்தளித்தார்கள்!

சிறுவயதிலிருந்து-
சிலைகளை வணங்கியதில்லை!

சிலைகளின் பெயரால்-
அறுக்கபட்டவைகளை-
உண்டதில்லை!

தவறான விசயத்திலிருந்து-
தவிர்ந்திருந்தார்கள்!

தவறிடாமல்-
இறைவனாலும்-
பாதுகாக்கபட்டார்கள்!

மனம்-
தனிமையை-
தேடியது!

ஒரு-
தெளிவையும்-
தேடியது!

அதற்காக-
"ஹீரா "குகையில்-
தனித்திருப்பார்கள்!

தியானிதிருப்பார்கள்!

வழிபட்டுகொண்டிருப்பார்கள்!

நாற்பது வயது-
ஆனது!

பல இறைதூதர்களுக்கு-
நடந்தது!

நபித்துவம்-
அடைவது!

முஹம்மது(ஸல்)-
அவர்களுக்கும்-
நேர்ந்தது!

முஹம்மது(ஸல்)-
திடுக்கிட்டார்கள்!

வானவர்-
ஜிப்ரீல் (அலை)-
வருகை புரிந்தார்கள்!

வானவர்-
ஜிப்ரீல்(அலை)-
ஓதுவீராக..!-என
சொன்னார்கள்!

முஹம்மது(ஸல்)-அவர்கள்-
ஓத தெரிந்தவனில்லையே..!-
என்றார்கள்!

வானவர்-
இறுக்க கட்டியணைத்து-
ஓத சொன்னார்கள்!

மூன்று முறை-
அதையே-
வானவர்-
சொன்னார்கள்!

மீண்டும் -
முஹம்மது(ஸல்)-
சொன்னதையே-
சொன்னார்கள்!

'' அனைத்தையும் படைத்த-
உங்கள் இறைவனின்பெயரால்-
ஓதுவீராக...!(96:1-6)
வானவர் சொன்னார்கள்!

இவ்வசனத்தை -
சுமந்தவர்களாக-
முஹம்மது(ஸல்)-
நடுக்கத்துடன்-
வீடு  சேர்ந்தார்கள் !

போர்வையை போர்த்துங்கள்!
போர்வையை போர்த்துங்கள்!-
என்றார்கள்!

நடுக்கம் -
தீர்ந்தபின் -
கதீஜா (ரலி)-
விசாரித்தார்கள்!

முஹம்மது(ஸல்)-
நடந்தவற்றை-
சொன்னார்கள்!

"வராகா" எனும்-
பெரியவர்!

முஹம்மது(ஸல்)-
அவர்களின்-
உறவினர்!

வேதங்கள்-
படித்தவர்!

"ஹிப்ரு " மொழி-
அறிந்தவர் !

அவரிடம்-
சென்றார்கள்!

அவர்-
கேட்டார்!

சொன்னார்!

உண்மையையும்!
அதிர்ச்சியையும்!

(தொடரும்....!)

// வானவர் ஜிப்ரீல் மூலமாக வந்த வசனங்கள்தான் குர் ஆன் எனும் வேதமாகும்.இது முழுக்க முழுக்க
இறைவனின் வசனங்களாகும்.
முஹம்மது(ஸல்)அவர்கள் சொல்ல சொல்ல தோழர்கள் தோல்கள் மரக்கட்டைகள் இவைகளில் எழுதிவைத்து சேர்த்ததே.குர் ஆன்
ஆகும்.விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து பாருங்கள்.தமிழாக்கமும் உள்ளது.
படித்து பார்த்தால் இலகுவாக புரிந்திடும்.//

// ஹதீஸ் எனும் நபி மொழியே முஹம்மது(ஸல்)அவர்கள் சொன்னவைகள் -செய்தவைகளாகும்.//

5 comments:

  1. வானவர் ஜிப்ரீலைப் பார்த்ததும் அதிர்ந்தார்கள் நபி(ஸல்),
    அண்ணா அடுத்ததாக அண்ணை கதீஜா ்(ரழி)ன் ஆறுதலை எதிர்பார்கிறேன்.........அனைத்துப் பென்னிர்கும் முன்னுதாரணம் .

    ReplyDelete
  2. அறிந்தேன்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. அருமையாக செல்கிறது! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  4. சொல்லிச் செல்லும் விதம் அருமை
    தொடர்கிறேன்

    ReplyDelete