Thursday 18 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (15)

பெண் சமூகம்!

அதன்-
அன்றைய நிலைகளை-
பார்ப்போம்!

குலபெருமையை கொண்டு-
கண்ணியமுடனும்-
இருந்தார்கள்!

அவர்கள்-
உடைந்த உறவுகளை-
சேர்க்கவும்-
செய்தார்கள்!

பிணைத்திருந்த-
உறவை -
பிச்சியும்-
எறிந்துள்ளார்கள்!

மற்ற ஒன்று-
இன்று -
முஸ்லிம் சமூகத்திலிருக்கும்-
மஹர் பணம் கொடுக்கும்-
முறையும் இருந்தது!

இனி வருவது-
சுடுவது!

கட்டியகணவனே-
மாதவிடாய் நின்றவுடன்-
தன் மனைவியை-
வேறொருவனிடம்-
"இணங்க " சொல்வான்!

கர்ப்பம் தரித்தது-
உறுதியான -
பிறகுதான்-
மனைவியிடம்-
"கூடுவான்"!

ஆரோக்கியமான -
குழந்தை பிறக்க-
இப்படி ஒரு வழியாம்!!

இன்னொரு முறை-
ஒரு பெண்ணை-
சிலர் "பயன்படுத்துவார்களாம்!"

யார்-
அக்குழந்தைக்கு-
தகப்பனென்று-
அப்பெண் சொல்வாளாம்!

அவனும்-
ஏற்பார்களாம்!

மற்றொரு முறை-
கொடி கட்டிய வீடு!

யாரும்-
நுழைய அனுமதிக்கும்-
அவ்வீடு!

நாறும்-
அவ்வீடு-
விபச்சாரத்தால்!

கருவுற்றால்-
அவள்!

ஊரு கூடி -
நிற்கும்!

முக ரேகை-
நிபுனருக்காக -
காத்திருக்கும்!

முக குறியை வைத்து-
குறிப்பிடுவார்-
ஒருவரை!

அவரும்-
ஏற்பார்-
தீர்ப்பை!

வரைமுறை -
இல்லாமல்-
"கட்டிகொள்வார்கள்"!

இஸ்லாம் வந்தபிறகுதான்-
ஒரு "வரையறைக்குள்"-
வந்தார்கள்!

அன்று-
விபச்சாரம்!
விபச்சாரம்!

தாராளம்!

குல பெருமைக்காகவும் -
வாள் எடுப்பார்கள்!

சாகவும்-
துணிந்தவர்கள்!

அநியாயகாரனானாலும்-
அநீதி இழைக்கபட்டவனாலும்-
உடன் பிறப்பென்றால்-
ஒன்றிணைவார்கள்!

தலைமை பொறுப்புக்காக-
"அவர்களுக்குள்ளாகவும்"-
அடித்தும் கொள்வார்கள்!

(தொடரும்....)

// மஹர் -என்பது திருமணத்திற்கு
முன் மணமகளுக்கு கொடுக்கபடும்.
திருமண தொகையாகும்.அத்தொகையை கொடுத்த பிறகுதான் திருமணம் செய்யலாம்.அத்தொகையை பெண்ணே தீர்மானிக்கனும்.
கொடுத்த மஹரில் கணவனுக்கு புசிக்க உரிமையில்லை. பெண்ணே மனமுவந்து கொடுத்தால் புசிக்கலாம். இஸ்லாமிய சட்டம்.//






3 comments:

  1. கொடுமைகள்...

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. மஹர் குறித்த விளக்கத்தை
    இபோதுதான் அறிகிறேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete