Saturday 6 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (3)

இறைவன்-
முதல் மனிதனை-(ஆதம்)
களிமண்ணால்-
படைத்தான்!

"படைக்கபட்ட்தற்கு"-
படைத்தவன்-
வானவர்களுக்கு-
சிரம்பணிந்திட -
கட்டளையிட்டான்!

எல்லோரும்-
சிரம்பணிய -
மறுத்தான்-
ஒருத்தன்!

அவன்தான்-
சைத்தான்!(சாத்தான்)

நெருப்பால்-
படைக்கப்பட்டவன்-எனும்
எண்ணம் -
சைத்தானுக்கு!

அதுதான்-
காரணம்-
சிரம்பணிய-
மறுத்ததற்கு!

இறைவனின்-
சாபத்திற்கு-
உள்ளானான்!

மனித சமூகத்தில்-
வழி கெடுப்பேன்-என
இறைவனிடம்-
அவகாசம் -
கேட்டான்!

இறைவனும்-
அனுமதித்தான்!

சைத்தான்-
அன்றுமுதல்-
வழிகெடுக்க-
ஆரம்பித்தான்!

இறைவனும்-
மனிதனை-
சோதித்து அறிய-
வழி வகுத்தான்!

ஆதமை-
படைத்தவன்!

அவருக்கு-
துணையாக-
ஹவ்வாவை-
படைத்தான்!

சுற்றிவர-
புசித்திட-
தாராளமாக -
அனுமதிதான்!

ஒரு பழத்தை மட்டும்-
புசிக்க-
அனுமதி மறுத்தான்!

இதில்தான்-
சைத்தான்-
சூழ்ச்சி-
செய்தான்!

ஆசைகாட்டி-
மோசம் செய்தான்!

தம்பதிகளை-
இறைவனின்-
கோபத்திற்கு-
உள்ளாக்கினான்!

இறைவன்-
விண்ணுலகில்-
இருந்தவர்களை!

மண்ணுலகிற்கு-
தண்டனையாக-
அனுப்பினான்-
அத்தம்பதிகளை!

பூமியில்-
வெவ்வேறு திசையில்-
இறக்கிடபட்டார்கள் !

ஒருவரை -
ஒருவர் காண-
அலைந்தார்கள்!

இறைவனிடம்-
மன்னிப்புக்காக-
மன்றாடினார்கள்!

இருவரும்-
ஒருவரை-
ஒருவர்-
சந்தித்தார்கள்!

அந்த-
ஆதம்-
ஹவ்வா"-தான்!

கிறிஸ்தவ நண்பர்கள்-
சொல்லும் -
"ஆதாம்-"
ஏவாள்தான் !

எப்படி!?
இப்படி!?

வரும் ஒவ்வொன்றாக-
முறைப்படி!

(தொடரும்...)

ஆதம் (அலை ) ஹவ்வா (அலை)
இவர்களின்மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

நபிமார்கள் பெயரை மற்றும் சத்தியவான்கள் பெயரை சொல்லும்போதோ-எழுதும்போதோ "அலைஹிஸ்ஸலாம்" சொல்லுவார்கள் எழுதுவார்கள்.


5 comments:

  1. முறைப்படி வருவதை தொடருங்கள்...

    ReplyDelete
  2. புதிய செய்திகள் தெரிந்து கொண்டேன். நன்று. நன்றி

    ReplyDelete
  3. தொடருங்கள்... தொடர்கிறோம்...

    புதிய தொடர் வெற்றிபெறட்டும்..

    ReplyDelete
  4. இதுவரை அறியாத புதிய தகவல் எனக்கு
    ஹவ்வா குறித்தது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete