Friday 12 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (9)

இன்றைக்கு-
முஸ்லிம்கள்-
நோன்பிருப்பது!

இல்லை -
அது-
இன்றைக்கானவர்களுக்கு மட்டும்-
கடமையானது!

முன்னுள்ள -
சமூகத்திற்கும்-
கடமையானது!

நோன்பென்பது-
இல்லை-
வெறுமனே-
பசித்திருப்பது!

அது-
இறைவனை-
தியானித்திருப்பது!

கெட்ட செயல்களையும்-
கெட்ட வார்த்தைகளையும்-
தவிர்த்திருப்பது!

எல்லாக்காலமும்-
முஸ்லிம் சமூகம்-
"தடுக்கபட்டவைகளை"(-ஹராம்)
விட்டு -
தவிர்க்கணும்!

நோன்பு இருக்கும்-
நேரங்களிலோ-
"ஆகுமானதை"-(ஹலால்)
விட்டும்-
ஒதுங்கனும்!

நோன்பு காலமானது!

ஆன்மீக-
பயிற்சி அளிப்பது!

வறண்ட பூமியில!

துளிகள்-
விழுவதுபோல!

மண்ணும் குளிர்ந்து-
புற்கள் முளைப்பதுபோல!

இருண்டு போன-
நெஞ்சத்துல!

இயந்திரமான-
வாழ்கையில!

இரக்க குணத்தையும் -
போராட்ட குணத்தையும்-
விதைப்பது போல!

ரமழான் மாதத்தை-
அடைந்தால்!

பதின்ம வயதினர்-
கழிக்கணும்-
அம்மாதத்தை-
நோன்பினால்!

நோய்வாய்பட்டவர்களுக்கும்-
பிரயாணிகளுக்கும்-
விட்டிட அனுமதிக்கப்பட்டுள்ளது!

அவர்கள்-
பிறமாதங்களில்-
நோன்பு கணக்கிட்டு-
வைக்கலாம்!

அதுவும்-
முடியாதவர்கள்-
ஒரு ஏழைக்கு-
நடுநிலையான -
உணவளிக்கணும்!

ஆனால்-
அம்மாதத்தின்-
சிறப்பை அறிந்தால்-
நோன்பு நோற்பதே-
சிறப்பாகும்!

இதுவே-
இறை மொழியாகும்!(குர் ஆன்)

நோன்பிருப்பதால்-
நோன்பு பெருநாள்!

அது என்ன!?-
ஹஜ் பெருநாள் எனும்-
தியாக திருநாள்!

"தியாகம் ...!!?

இனி வரும்-
விபரம்!

(தொடரும்....)




3 comments:

  1. நோன்பு பற்றிய விளக்கம் நன்று. தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. அருமையாக விளக்கிப் போகிறீர்கள்
    தொடர்கிறேன்

    ReplyDelete