Saturday 20 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும் !(17)

அக்காலத்தில்-
"ஹாஷிம்"-என்றொருவர்
வாழ்ந்தார்!

மதிப்பும்-
மரியாதையுமாக-
இருந்தார்!

அவரின் -
கிளையாளர்களே-
ஹாஷிம் கிளையார்-என
அழைக்கப்பட்டனர்!

அவர்தான்-
காபதுல்லாவை-
நிர்வகித்தார்!

அவரின்-
மரணத்திற்கு பின்-
உடன்பிறந்த -
முத்தலிபு-
"பொறுப்புகளை"-
ஏற்றுகொண்டார்!

முத்தலிபு-
பிறகுதான்-
அறிந்தார்!

தன் சகோதரர்(ஹாஷிம்)மகன் -
மதீனாவில்-
இருப்பதாக!

விரைந்தார்-
அப்பாலகனை-
அழைப்பதற்காக!

முத்தலிபு-
கூப்பிட்டார்!

பாலகன்-
வர மறுத்தார்!

தாயாரும்-
தடுத்தார்!

முத்தலிபு-
அம்மையாரிடம்-
வாதிட்டார்!

சகோதரின்-
சொத்துகளை -
பாதுகாக்கவும்!

புனித ஆலயம்-
இருக்கும்-
மக்காவில்-
வசிப்பதற்கும்!

தாயாரும்-
சம்மதித்தார்!

ஒட்டகத்தில்-
முத்தலிபுடன்-
அப்பாலகன்-
பயணித்தார்!

இதனை கண்ட-
மக்கத்து மக்கள்!
அச்சிறுவனை-
சொன்னார்கள்-
"அப்துல் முத்தலிபு"-என்று!

முத்தலிபு-
ஆனார்-
கோபத்தில் கனன்று!

காரணம்-
"அப்துல் முத்தலிபு-என்பதற்கு
அர்த்தம்-
முத்தலிபுவின் அடிமை!

அதனால்தான்-
காட்டினார்-
வார்த்தையில்-
கடுமை!

அச்சிறுவனின்-
இயற்பெயர்-
இருந்தது-
"ஷைபா" வாக!

அன்று முதல்-
ஆனது-
"அப்துல் முத்தலிபு"வாக!

வரலாறு-
அப்படிதான்-
பதிந்துள்ளது!

"தலைப்பை" ஒட்டிய -
தகவல்-
அருகில் வர-
உள்ளது!

(தொடரும்....)






4 comments:

  1. வரலாறை அறிந்தேன்... தகவலை அறிய தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. வித்தியாசமான முயற்சி பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. ஆவலுடன் தொடர்கிறேன்

    ReplyDelete