Thursday 25 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(22)

மக்காவில்-
கதீஜா எனும்-
பெண்மணி!

அவர்-
செல்வமும்-
மதிப்பும் மிக்க-
பெண்மணி!

அவர்-
வியாபாரம்-
செய்து வந்தார்!

சில ஆட்களையும்-
வேலைக்கு பணித்திருந்தார்!

கிடைக்கும் லாபத்தில்-
விற்றவருக்கும்-
பகிர்ந்தளிப்பார்!

முஹம்மது (ஸல்)அவர்களின் -
நேர்மையை அறிந்திருந்தார்!

ஒரு முறை-
முஹம்மது(ஸல்) அவர்களை-
கூப்பிட்டு வரசொன்னார்!

கதீஜா -
லாபத்தில் பங்குண்டு-என
சொன்னார்!

முஹம்மது (ஸல்)-
வியாபாரத்திற்காக-
ஷாம் தேசம் சென்றார்!

அவர்களுடன்-
கதீஜாவின்-
அடிமை பெண் மைசராவும்-
சென்றார்!

லாபத்தோடு-
முஹம்மது (ஸல்)-
நாடு திரும்பினார்!

கதீஜா-
மனமகிழ்ந்தார்!

பங்கு கொடுத்தார்!

தன் பங்கு-
லாபத்தால்-
மகிழ்ந்தார்!

கதீஜா அவர்கள்-
ஒரு விதவை பெண்!

கதீஜாவின்-
"முடிவுக்காக"-
தலைவர்கள்-
காத்திருந்தார்கள்-
அவர்களின் முன்!

மைசாரா-
முஹம்மது(ஸல்)-
அவர்களின்-
நற்குணங்களை -
கூறிகொண்டிருக்க!

தன் வாழ்க்கைத்துணை -
முஹம்மது (ஸல்)-
அவர்களே -என்கிற
எண்ணம் மேலோங்க!

தன் எண்ணத்தை-
தோழி நபீசாவிடம்-
சொல்லி விடுகிறார்!

முஹம்மது (ஸல்)அவர்களும் -
சம்மதிக்கிறார்!

பெரியவர்கள் கூடி-
பேசி முடிக்கிறார்கள்!

திருமணத்தையும்-
நடத்தி முடிக்கிறார்கள்!

திருமணத்தின்போது-
கதீஜா  அவர்களுக்கு-
நாற்பது வயது!

முஹம்மது (ஸல்)அவர்களுக்கு-
இருபத்தைந்து வயது!

அத்தம்பதிகளுக்கு-
ஆறு மக்கள்மார்கள்!

நான்கு பெண்கள்!
இரண்டு ஆண்கள்!

பெண்மக்கள் -
வாழ்ந்தார்கள்!

ஆண்மக்கள்-
குழந்தை பருவத்திலேயே-
மரணித்தார்கள்!

சத்தியத்தை-
சொல்ல வந்த-
உத்தமருக்கே-
எத்தனை வேதனை!?

நம் போன்ற -
சாமானியருக்கு-
வராதாது-
சாத்தியமா!?
சோதனை!?

(தொடரும்....)



4 comments:

  1. சுவாரஸ்யமாக செல்கிறது! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  2. புதிய தகவல்கள்.....

    தொடர்கிறேன்....

    ReplyDelete
  3. thindukkal thanabalan..!

    thodarkiren...

    (balan sako commentsai naan theriyaamal azhithu vitten.
    Aathalal naane ezhuthivitten)

    ReplyDelete
  4. அப்புனிதர்களுக்கே துயரம் எனில்
    நாமெல்லாம் எம்மட்டு/
    ஆர்வத்துடன் தொடர்கிறேன்

    ReplyDelete