Tuesday 23 July 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமும்! (20)

சென்றார்-
"ஹலீமா"-
குழந்தையை-
சுமந்தவளாக!

அவரே-
சொல்கிறார்-
இப்படியாக!

காய்ந்துபோன-
என் நெஞ்சி!

பால் சுரந்து-
நிரஞ்சிச்சி!

முஹம்மது (ஸல்)வும்-
என் குழந்தையும்-
குடித்தது!

இரவில்-
இனிமையாக-
உறங்கியது!

என் -
குழந்தைகள் அழும்-
பசியால்-
தினம் தினம்!

அன்று நடப்பதோ -
அபூர்வம்!

என் கணவர்-
சொன்னார்-
அருள் நிறைந்த-
குழந்தையை-
பெற்றிருப்பதாக!

நானும்-
தலையசைத்தேன்-
ஆமோதித்தவளாக!

வரண்டுபோன-
எங்கள் பூமியிலே!

மடி நிறைந்து திரும்பும்-
எங்கள் கால்நடைகளே!

தவணைகாலம்-
முடிந்தது!

முஹம்மது(ஸல்)-
திரும்ப கொடுக்கவேண்டிய-
நேரமும் வந்தது!

ஹலீமா சொன்னார்-
இன்னும் -
சிலகாலம்-
வளர்ப்பது-
நலம்!

சம்மதித்தது-
தாயார் ஆமினா-
மனம்!

சிறுவர்களுடன்-
முஹம்மது (ஸல்)-
சென்றார்கள்!

அப்போது-
வானவர் ஜிப்ரீல் (அலை)-
வந்தார்கள்!

முஹம்மது(ஸல்)வை-
மயக்கமுற-
செய்தார்கள்!

நெஞ்சை-
பிளந்தார்கள் !

இதயத்தில்-
ஒரு சிறு துண்டை-
நீக்கினார்கள்!

இது -
சைத்தானின் பகுதியாகும்"-
என்றார்கள்!

பின் இதயத்தை-
தங்கத்தட்டில் வைத்து-
ஜம் ஜம் நீரால்-
கழுவினார்கள்!

பிறகு-
நெஞ்சை பொருத்தினார்கள்!

கேள்வி வரலாம்-
இப்படியெல்லாம்-
நடந்திருக்குமா!?

சொல்லுங்கள்-
ஏன் நடக்காமல்-
இருக்குமா!?

இதய அறுவை சிகிச்சை-
மருத்துவர் -எனும்
மனிதன் செய்கிறான்!

அம்மனிதனையே-
படைத்தவன்-
"நினைத்தவற்றை"-
செய்யமுடியாதவனா!?
இறைவன்!?

மயக்கமுற்ற -
முஹம்மது (ஸல்)-வை
பார்த்து -
மற்ற சிறுவர்கள்-
இறந்துவிட்டதாக-
சொன்னார்கள்!

முஹம்மது(ஸல்)-
நிறம் மாறி இருந்தார்கள்!

ஹலீமா-
விபரீதம்-
ஆகிட கூடாதென்று!

விட்டுட்டுவந்தார்-
தாயார்-
ஆமினாவிடம்-
சென்று!

(தொடரும்....)






4 comments:

  1. வியப்பு...! தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. அறியாத தகவல்... தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. இறைவன் அற்புதங்கள் வியக்க வைக்கும்! அருமை! தொடர்கிறேன்! நன்றி

    ReplyDelete