Monday 15 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்! (12)

"ரஹீக்"-எனும்
புத்தகம்!

வரலாற்றுதொடருக்கு-
ஆதார நூலாகும்!

அப்புத்தகம்-
ஒரு -
வரலாற்றுபெட்டகம்!

அது-
ஒரு-
ஆய்வு கட்டுரை-என்பதே
சிறப்பம்சம்!

1976 மார்ச் -ல்
உலக மாநாடு-
நடந்தது!

அதில்-
உலக அளவிலான-
கட்டுரை போட்டியும்-
நடந்தது!

வந்தது-
1182 கட்டுரைகள்!

தேர்வானது-
183 கட்டுரைகள்!

இக்கட்டுரையே-
முதல் பரிசு-
 பெற்றது!

ஆசிரியர்-
பேரறிஞர் -
சபியுர்ரஹ்மான்-
ஆவார்!

இவர்-
இந்தியாவின்-
உ .பி யை-
சேர்ந்தவர்!

அரபி மொழியிலுள்ளதை-
தமிழில் எழுதியது-
உமர் ஷரீப்-
அவர்கள்!

வெளியிட்டது-
தாருல் ஹுதா-
பதிப்பகத்தார்கள்!

இறைவனின்-
சாந்தியும்-
சமாதானமும்-
உண்டாகட்டுமாக!

நல்லோர்கள் மீதும்-
சத்தியவான்கள் மீதும்-
நம் அனைவரின் மீதும்-என
தொடங்குகிறேன்-
பிரார்த்தித்தவனாக!

வருவது-
சத்திய பாதை!

அவ்வளவு-
எளியதா!?-
சத்திய பாதை!

ரத்தத்தை-
 பழகிய-
கத்திகள்-
நறுமணத்தை-
நுகருமா!?

புரண்டோடிய-
பாவங்கள்-
புண்ணியத்தை-
அடையுமா!?

நாம் பயணிப்போம்-
கேள்வியை தேடி-
பதில்களையும்-
பதில்களுக்கான-
கேள்விகளையும்-
நோக்கி!

தகிக்கும்-
வெயிலோடும்-
தாகம் கொண்ட-
நெஞ்சோடும் -
பயணிப்போம்-
பாலைவனம் நோக்கி!

(தொடரும்...)

புத்தக பெயர்;ரஹீக்.

வெளியிடுபவர்.
தாருல் ஹுதா,
சென்னை .01


4 comments:

  1. கேள்விகளையும் பதில்களையும் அறிய தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. தொடர்ந்து வருகிறேன்! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
  3. நானும் தொடர்கிறேன்

    ReplyDelete