Thursday 22 August 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமும்!(45)

இஸ்லாமிய படை-
புறப்பட்டது!

எதிராளிகளின் படையும்-
எதிர் திசையில் வந்தது!

இருபடைகளும்-
உளவு பார்த்தது!

நிலைகளை -
உணர்ந்தது!

நபிகளார்-
எதிரிகளின் -
எண்ணிக்கையை-
அறிய முற்பட்டார்கள்!

சிலரிடம்-
விசாரித்தார்கள்!

பதில் சொன்னவர்கள்-
எதிரிகள்-
வந்திருப்பதை-
சொன்னார்கள்


எத்தனை பேர்கள்-என்பதை
தெரியாது-
என்றார்கள்!

உணவுக்காக -
அறுக்கப்படும்-
ஒட்டக கணக்கை-
நபிகளார்-
கேட்டார்கள்!

ஒன்பது அல்லது பத்து-
என்றார்கள்!

நபிகளார்-
தொள்ளாயிரத்திற்கும்  மேற்பட்டவர்கள்-என
கணித்தார்கள்!

எதிரணியும்-
உளவு பார்த்தது!

உளவு செய்தி சொன்னவன்-
வார்த்தையில்-
பயம் தெரிந்தது!

அதில் -
ஒரு குழு -
திரும்பி சென்றது!

ஆயிரம் பேர்கொண்ட-
கூட்டம்-
இருந்தது!

உத்பாவிடம்-
உளவாளி பயத்தை-
சொன்னான்!

இதனை அறிந்த-
 அபூஜஹ்ல் சினம் கொண்டான்!

யாருடைய-
ஆலோசனையையும்-
கேட்க மறுத்தான்!

போர் என்பதில்-
வெறியுடன்-
இருந்தான்!

படைகள்-
நேர்கோட்டிற்கு -
வந்தது

அப்போது....!?

(தொடரும் )




1 comment:

  1. அப்போது... ஆவலுடன் தொடர்கிறேன்...

    ReplyDelete