Wednesday 23 April 2014

உலக புத்தக தினம்! {23 ஏப்ரல்}

தனக்கு முன்னிருப்பதை
பிரதிபலிக்கும்
கண்ணாடியைப்போல்!

தனக்குள்ளடங்கிய உயிரை
வெளியேற்றிடும்
கருவறையைப்போல்!

எண்ணங்கள்
வார்த்தைகளாக
வெளிப்படுவதைப்போல்!

கடுமையாக
 முகத்தை வைத்துக்கொண்டாலும்
கண்ணீராய் கசிந்திடும்
காதலைப்போல்!

கடந்த காலத்தை
தன்னுள் புதைத்து
மற்றவர்களுக்கு உணர்த்துகிறது
புத்தகங்கள்!

பக்கங்களை புரட்டினால்
மனங்களில் துளிர்கிறது
சிந்தனைத்துளிகள்!

புத்தகங்கள்
வாழ்ந்து சென்றவர்களின்
வரலாறு!

வாசிப்பவர்கள்
நாளைய வரலாறு!

வாசிப்போம்!
வாசிப்பையும் நேசிப்போம்!

     




3 comments:

  1. மிக அருமை..வாசிப்பை சுவாசிப்போம்...

    ReplyDelete
  2. வாசிப்போம்.. வாசிப்பை நேசிப்போம்....

    ReplyDelete
  3. வாசிப்போம்!
    வாசிப்பையும் நேசிப்போம்!

    ReplyDelete