Thursday 3 April 2014

பிறந்த பூமி !(42)

போராளிகளால் பொறுக்க முடியவில்லை!
தண்டனையை தடுக்க வழியுமில்லை!

வெளியிலுள்ள போராளிகள் நகரத்திற்குள் நுழைய முடியாத கெடுபிடிகள்!
போராளிகள் நெஞ்சமெங்கும் கோபக்கணைகள்!

வழமையாக காலை 5-55 தூக்கிலிடும் நேரம்!
போராளிகள் பள்ளிவாசல்களுக்கு தகவல் அனுப்பினார்கள் அந்நேரம்!

''நகாராக்கள்'' முழங்கியது!
மக்களை எழுப்பியது!

தூக்கிலிடும் செய்தி!
தூக்கத்தை தொலைக்கச்செய்த செய்தி!

மக்கள் அனைவரும் சிறைச்சாலை நோக்கி சென்றனர்!
இறைவனை துதித்தே பயணித்தனர்!

''அஷ்ஹது அ(ன்)லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹூ! லாஇலாஹ இல்லல்லாஹூ முஹம்மதுர் ரசூலுல்லாஹி!''

அவ்வாசகம்!

மக்கள் உயிரிலிருந்து ஒலித்த திருவாசகம்!

அதே வேளை!
சிறைச்சாலை!

தூங்கிய உமர் எழுப்பப்பட்டார்!

உமர் படபடப்பின்றி எழுந்தார்!

பாதிரியார் ஒருவர் !
''கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக..!!என்றார்!

உமர் முக்தார் சொன்னார்!

''கொஞ்ச நேரமே இருக்கிறது!
குளிப்பதற்கு தண்ணீர் தேவைபடுகிறது!

வெள்ளை துணி ஆறு கஜம் ''கபன்''அடையாக்க வேண்டியுள்ளது!

இதுதான் நான் கேட்டுக்கொள்வது!''

ஏற்பாடு செய்யப்பட்டது!

குளித்த உமர் தொழுதார்!

''கபன்''ஆடையை அணிந்தார்!

கையில் குர்ஆனுடனும்,நெஞ்சில் ஈமானுடனும் தூக்கு மேடைக்கு சென்றார்!

தூக்கு மேடை நெருங்க நெருங்க!

மக்கள் ''இறைவனை துதிப்பது'' உமரின் காதில் ஒலிக்க!

மேடையில் ஏறினார்!

மக்கள் குழுமி இருந்தததை கண்டார்!

அல்லாஹு அக்பர்!
அல்லாஹு அக்பர்!! எனும்
முழக்கம்!

எதிரொலித்தது!
எக்குத்திக்கும்!

அருகிலிருந்த நீதிபதி தூக்கிலிடும் காரணங்களை படித்தார்!
பழைய பல்லவியை பாடினார்!

கடைசியாக சொல்ல ஏதும் உள்ளதா..!?என கேட்டார்!

உமர் சொன்னார்!

'' குர்ஆனை ஓத அனுமதியுங்கள்!
பிரார்த்தித்து கையை இறக்கும்வரை பொறுத்திருங்கள்!

அதனைத்தொடர்ந்து ''காரியத்தை''முடித்திடுங்கள்!
எனது உடலை மக்களிடம் ஒப்படைத்திடுங்கள்!

முசோலினி அவர்களை சந்திப்பீர்களேயானால்!
அவரிடம் சொல்லுங்கள்!

அவருக்கு தூக்கு சம்பவம் நடக்காமல் இருக்க பிரார்த்திக்க சொல்லுங்கள்!

நான் மனநிறைவுடன் மரணத்தை தழுவினேன் என சொல்லிடுங்கள்!

என் மக்கள் விழிப்படைந்து விட்டார்கள்!
சுதந்திரம் அடையாமல் விடமாட்டார்கள்!என
சொன்னார்!

மூக்கு கண்ணாடிஅணிந்து குர்ஆனை ஓதினார்!

ஒரு கையில் குர்ஆனை பிடித்துக்கொண்டார்!

மறு கையை தூக்கி பிரார்த்தித்தார்!
கையை இறக்கினார்!

காலின் கீழிருந்த பலகைகள் பிரிந்தது!
கழுத்திலிருந்த கயிறு இறுக்கியது!

''இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்''

இறைவனிடமிருந்தே வருகிறோம்!
இறைவனிடமே மீள்கிறோம்!

(தொடரும்...!!)

//குறிப்பு;
நகரா-பள்ளிவாசல்களில் பாங்கு சொல்வதற்கு முன் அடிக்கபடும் முரசு.

ஈமான்-இறை நம்பிக்கை.

கபன்-முஸ்லிம்களுக்கு இறுதி ஆடையாக அணிவிக்கபடும் வெள்ளை துணி.//


5 comments:

  1. மறைந்தாலும் மனதில் நிற்கிறார் உமர்! எழுத்திலும் இவருடைய மரணத்தை ஏற்க கஷ்டமாக உள்ளது!

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரர்
    படித்ததும் கண்கள் கசியும் வண்ணம் உமர் அவர்களின் மரணத்தைக் கண்முன்னே நிறுத்தியது உங்கள் எழுத்து நடை. வாழ்த்துகளும் பாராட்டுகளும் சகோ. தொடர்ந்து பிறந்த பூமி எழுதுங்கள். பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  3. மறைந்த வீரர்.....

    மாவீரன் மறைவு மனதிலிருந்து மறையாது...

    ReplyDelete