Sunday 6 April 2014

புரோட்டாக்காரன் கவிதைகள் !!


ஓர் இனம்!
நானும் !
புரோட்டாவும்!

அடிபட்டாலும்!

சுவை தருகிறோம்!

----------------

புரோட்டா!
என்னை சுடுவதும்-
நான் தொடுவதும்-
ஓர் தொடர்கதை!

ஆதலால்தானோ!?-
சுடும் வார்த்தைகளும்-
என்னை துவளச்செய்வதில்லை!?

-----------------

புரோட்டாவே!
நீயோ!
எண்ணெய் ஊற்றாவிட்டால் ''கருப்படிக்கிறாய்''!

என்னவளோ!
என்னைக்கண்டாலே கடுப்பாகிறாள்!

-----------------------

திரியில்லாத மெழுகுவர்த்திகள்-
நாங்கள்!

உறவுகள் ஒளி பெற-
நெருப்போடு உறவாடுபவர்கள்!

-----------------------
''விசிற''முடியுமா.!?
இடையில் கிழிந்திடுமா.!?
தொட்டவுடன்
சொல்லிவிடும்
புரோட்டா மாவு!

வாழ்வில் வசந்தமா.!.?
வாழ்வை முடிக்கும் விஷமா.!?
அர்த்தம் தர மறுக்கிறது
வஞ்சியவளின் சிரிப்பு!

4 comments:

  1. அட...! வித்தியாசமான சிந்தனை...

    ReplyDelete
    Replies
    1. சகோ பாலன்!

      கருத்திற்கு நன்றி!

      Delete
  2. வித்தியாசமான சிந்தனை சீனி.

    பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. சகோ ,வெங்கட்!

      கருத்திற்கு நன்றி!

      Delete