Saturday 19 April 2014

சுடு சோறு..!!

சூடான சோற்றை
பிணைந்து பிணைந்து
சூட்டைக்குறைத்து
குழந்தை வாயில் திணித்திடும்
தாயைப்போல!

'பட்டதை' எழுதிட
 எண்ணுகையில்
யாரையேனும் சுட்டிடுமோ எனும்
தயக்கத்தினால்
தட்டி தட்டி வார்த்தைகளை
செதுக்குகிறேன்!



5 comments:

  1. நல்ல உவமை
    தாயின் அக்கறையுடன் நீங்கள் கொண்ட
    சமூக அக்கறையை ஒப்பிட்டதை மிகவும் ரசித்தேன்
    இந்த விஷயத்தில் நானும் உங்கள் இனம் என்பதால்
    இக்கவிதை என்னை மிகவும் கவர்ந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. செதுக்குவதை ரசிக்கிறோம்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அழகான உதாரணம்..

    அக்கறை காட்டும்
    அருமையான கவிதை..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. சிறப்பான உதாரணம்.

    தொடர்ந்து மலரட்டும் படைப்புகள்.

    ReplyDelete
  5. நல்ல உவமை! சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete