Friday 18 January 2013

சோதனைகள்.....!!

கூர் தீட்டிடும்-
நீ!-
கத்திஎன்றால்!

குத்தி கிழித்திடும்-
நீ!-
"அட்டை கத்திஎன்றால்!"

மோதி உடைந்திடும்-
நீ-
இரும்பு கவசமென்றால்!

பாதியாக்கி-
வீசிடும்-
நீ!-
காகித பட்டமென்றால்!

ஜொலித்திட-
உரசிடும்-
நீ!-
வைர கற்கள் என்றால்!

நசுக்கி-
உடைத்திடும்-
நீ!-
உப்பு கற்கள் என்றால்!

விரைந்தோடும்-
நீ!-
எதிர்க்கும்-
வேங்கை என்றால்!

துரத்தி-
கொண்டே இருக்கும்-
நீ!-
வெள்ளாடு என்றால்!

இறையாகிடும்-
நீ!-
தீக்கங்குகள் என்றால்!

சுழற்றி-
அடித்திடும்-
நீ!-
சாம்பல் என்றால்!

அடைபடும்-
இடத்தை பொறுத்தே-
உருவம் கொள்ளும்-
திரவகங்கள்!

அடையும்-
மனிதனின்-
தன்மையை கொண்டே-
மாறிடும்-
சோதனைகள்!

சோதனை-
வரும்போது-
தந்திடும்-
வேதனை!

போகும்போது-
தந்து செல்லும்-
படிப்பினை!

10 comments:

  1. அடைபடும்-
    இடத்தை பொறுத்தே-
    உருவம் கொள்ளும்-
    திரவகங்கள்!.....அருமை சீனி.மனதில் பதிகிறது வரிகள் !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      ungal udanadi varavirkku mikka nantri maa..!

      Delete

  2. சோதனைகள் சாதனை ஆகும்
    மனத்தில் உறுதி இருந்தால் .
    நல்ல உவமைகள்.
    வாழ்த்துக்கள் சீனி.

    ReplyDelete
  3. வரும் ஒவ்வொரு சோதனையும் நமக்கு ஒரு படிப்பினை தந்து செல்லும்..... உண்மை சீனி....

    நல்ல கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  4. அழகிய வரிகளில் அருமையானதொரு தத்துவக்கவிதை.

    ReplyDelete
  5. நல்ல தன்னம்பிக்கை வரிகள்! ஒவ்வொரு வரிகளும் வைரங்கள்! பாராட்டுக்கள்! இன்று என் தளத்தில் அண்டப்புளுகன் ஆகாசப்புளுகன்!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_19.html நான் தான் மாஸ் ஹீரோ! பவர்ஸ்டார் அட்ராசிட்டி!http://thalirssb.blogspot.in/2013/01/blog-post_9185.html

    ReplyDelete