Tuesday 22 January 2013

நம் எழுத்துக்கள்.....!!

பாலையில்-
பிறந்ததால்-
பேரீத்தம்பழம்-
சுவையில்-
குறைவில்லை!

சேற்றில்-
பூத்ததால்-
தாமரை அழகு-
மங்கிட வில்லை!

புதைந்து-
கிடந்ததால்-
கனிமங்கள்-
"கண்ணியம்"-
காணாமல் -
போகவில்லை!

பட்டறையில்-
அடிபட்டதால்-
இரும்பினாலான-
ஆயுதங்கள்-
அசிங்கபடுவதில்லை!

கரும்பாறை-
நிறமான-
பனை மரத்திலிருந்து-
வருவதால்-
பதநீர்-
கசப்பதில்லை!

தழும்புகள் உள்ள-
உடம்பான-
தென்னையில் இருந்து-
வருவதால்-
இளநீர்-
இனிக்க மறுப்பதில்லை!

எதிலிருந்து-
என்ன வருகிறது-
முக்கியமில்லை!

இனிமை-
உண்மை -
இருக்குமானால்-
உலகம் ஏற்க-
மறுப்பதில்லை!

இன்று-
நாம் "வலையில்-"
பதியலாம்!

நாளை-
நம் எழுத்துக்கள்-
வரலாற்றையும் -
நிர்மாணிக்கலாம்!!









14 comments:


  1. வணக்கம்

    பேரீசம் சொல்லில் பிறந்த கவிகண்டு
    பாரீசு பாரதி பாடுகிறேன்! - மாரியெனச்
    சீனி படைக்கின்ற சிந்தனை அத்தனையும்
    தேனி படைக்கின்ற சீா்!

    ReplyDelete
  2. எதிலிருந்து-
    என்ன வருகிறது-
    முக்கியமில்லை!

    இனிமை-
    உண்மை -
    இருக்குமானால்-
    உலகம் ஏற்க-
    மறுப்பதில்லை!//


    அருமை அருமை
    சிந்தனையின் ஆழமும் வேகமும் மனம் தொட்டது
    சிந்தனைக்கு விருந்தளிக்கும் சிறப்பான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உண்மை விளம்பி சீனியே நீவிர்
    வாழ்க என்றும் சிறப்புடன் !

    ReplyDelete
  4. கடைசி வரிகள் கலக்கல்! அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
  5. சிறப்பான கவிதை...

    ReplyDelete
  6. எதிலிருந்து-
    என்ன வருகிறது-
    முக்கியமில்லை!

    இனிமை-
    உண்மை -
    இருக்குமானால்-
    உலகம் ஏற்க-
    மறுப்பதில்லை!
    //arumai sakoo

    ReplyDelete
  7. நல்ல சிந்தனை.... நல்ல உவமைகள் கொண்டு விளக்கியது நன்று....

    ReplyDelete