Sunday 9 June 2013

தேடலுடன்...தேனீ...!!(3)

உண்மை-
இது-
என்றது-
முகவுரை!

விலகியது-
கற்பனை-என
நினைத்த-
என்-
மன திரை!

ஆரம்பித்தது-
வயலோடும்-
வறுமையோடும்!

மண்ணில்-
கலந்திருக்கும்-
பாசமும்!

அம்மண்ணில்-
வாழ்ந்த-
மக்களின்-
வாழ்வே-
கண்ணீராய்!

படிக்கும்போது-
என் விழிகளும்-
ஈரமாய்!

மாட்டுக்கு-
நடக்கும்-
பிரசவமும்!

ஒரு -
பெண்ணுக்கு-
நடக்கும்-
பிரசவமும்!

அதை -
விளக்கிய-
எழுத்தாளரின்-
விதமும்!

மறக்க-
மறுக்கிறது-
என் நெஞ்சமும்!

கணவனுக்காய்-
வாழும்-
ஒரு ஜீவன்!

ஜீவனது-
போனதும்-
தவியாய் தவிக்கும்-
மறு ஜீவன்!

இப்படியாக-
கதையும்-
போகுது!

எத்தனை-
வலிகள்-
வந்தாலும்-
உழைப்பவனின்-
உள்ளமோ-
இரும்பாகுது!

கனவுக்குள்-
கனவு-
இல்லை!

நினைத்துபார்த்து-(பிளாஷ் பேக்)
எழுதியதுதான்-
இக்காவியம் என்பது-
மிகையில்லை!

ஆனால்-
அதில் -
ஒரு காதலை-
வைத்தாரே!

அதில்-
அதிர்ச்சி-
வைத்தியமே-
எழுதியவர்-
நடத்திட்டாரே!

படித்ததும்-
எனக்கோ-
சிலிர்த்தது-
உடல்!

ஏனோ-
கண்களில்-
பட்டது-
மிளகாய் தூள்கள்!

(தொடரும்....)

3 comments:

  1. ஆரம்பமே 'கலங்க'லாகத் தான் உள்ளது... தொடர்க...

    ReplyDelete
  2. அருமை! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete