Thursday 20 June 2013

தேடலுன்.....தேனீ...!!(14)

வாழ்வில்-
தவறிழைப்பவர்களும்-
உண்டு!

தவறே-
வாழ்வானவர்களும்-
உண்டு!

வரம்!
சாபம்!
வாலிபம்!

தறிகெட்ட-
வயசு!

கட்டுபடாத-
மனசு!

வாலிப-
நிகழ்வுகள்!

இனிப்பவைகள்!
கருக்குபவைகள்!

பேதை!
போதை!

இதுவே-
மால்கமின்-
வாலிப பாதை!

இரவு நேர-
விடுதிகளும்!

"தூக்கி" போட்டு-
மிதிப்பவைகளும்!

பொழுதுபோக்காகும்!

இது-
போதாதென-
போதை பொருள்-
விற்பனை!

"காட்டி" கொடுத்ததால்-
சட்டம்-
கைது செய்கிறது-
மால்கம்தனை!

மல்கம்-
பழிவாங்க-
துடிக்கிறார்-
துரோகியான -
நண்பனை!

சிறைக்கு-
செல்கிறார்-
சுமந்து கொண்டு-
விலங்கினை!

ஒன்றுதான்-
சிறையறை!
கருவறை!

மகான்களையும்-
உட்கொண்டுள்ளது!

மாபாதகர்களையும்-
உட்கொண்டுள்ளது!

மாறியவர்களும்-
உண்டு!

"மாற்றபட்டவர்களும்"-
உண்டு!

மால்கம்-
இனி-
ஜொலிப்பாரா!?
பழிவாங்க போவாரா!?

(தொடரும்....)

1 comment: