Friday 2 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(30)

எதிர்தரப்பினர்கள்-
ஒன்று சேர்ந்தார்கள்!

அபூதாலிப்பை-
சந்திக்க வந்தார்கள் !

வந்ததின்-
நோக்கத்தை-
சொன்னார்கள்!

தம்பி மகனின்(முஹம்மது(ஸல்))-
பிரசாரத்தை-
நிறுத்திடனும் -என
சொன்னார்கள்!

அபூதாலிப்-
சமாதானம் செய்து-
அனுப்பினார்கள்!

முஹம்மது(ஸல்)-
பிரச்சாரம்-
எப்போதும் போலவே!

மீண்டும்-
அபூதாலிபுவை-
சந்தித்தார்கள்-
கோபம் தலைக்கு ஏறவே !

வார்த்தையில்-
கடுமை -
இருந்தது!

"கொடூரம்"-
நடக்கலாம்-எனவும்
உணர்த்தியது!

அபூதாலிபு-
சொல்லிபார்த்தார்கள்-
நபிகள் நாயகத்திடம்!

"வலது கையில் சூரியனையும்-
இடது கையில் சந்திரனையும்-
வைத்தாலும்!
மார்க்கத்தை மேலோங்க செய்யும் வரை!
அல்லது-
நான் அழியும் வரை-
அழைப்பு  பணியை-
விட முடியாது -என்றார்கள்-
பெரிய தந்தையிடம்!

தீர்கமாக-
சொன்னார்கள்!

தீர்க்கதரிசி அவர்கள்!

முஹம்மது(ஸல்)-அவர்களும்
விடுவதாக இல்லை!

அபூதாலிபு-
தம்பி மகனை-
விட்டு கொடுப்பதாக இல்லை!

கயவர்களோ-
"காரியத்தில்"-
இறங்கி விட்டார்கள்!

சொல்ல முடியாத-
துன்பங்களை-
இழைத்தார்கள்!

கட்டி கொடுத்த-
மகள்களை-
விவகாரத்து செய்தார்கள்!

நடக்கும் பாதையில்-
முற்களை வைத்தார்கள்!

எச்சிலையும்-
உமிழ்ந்தார்கள்!

வீட்டினுள்-
அசுத்தத்தை-
எறிவார்கள்!

தொழுகையில் "சஜ்தா"வின்போது-
ஒட்டககுடலை அவர்களின்-
தோள்மேல் போட்டார்கள்!

எழமுடியாமல்-
மூச்சி திணறினார்கள்!

எதேச்சையாக வந்த-
மகளார் பாத்திமா (ரலி)-
அக்குடலை நீக்கினார்கள்!

மல்லாக்க படுத்துக்கொண்டு-
மேல் நோக்கி எச்சில் துப்பும்-
முட்டாள்கள்-
இவர்கள்!

நபிகளாரை -
அசிங்கபடுதுவதாக எண்ணி-
அவர்களே அசிங்கபட்டாதாகவே உள்ளது-
வரலாறுகள்!

(தொடரும்....)

// சஜ்தா என்பது தொழுகையின்போது தலையை கீழே வைத்து வணங்குவதாகும்//




3 comments:

  1. வரலாற்றை தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. நற்பணி தொடரட்டும்

    ReplyDelete
  3. நபிகளாரை -
    அசிங்கபடுதுவதாக எண்ணி-
    அவர்களே அசிங்கபட்டாதாகவே உள்ளது-
    வரலாறுகள்!//

    மிகச் சரியான வாசகம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete