Saturday 3 August 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(31)

ஆபத்து-
நிறைந்து விட்டது!

"அழைப்பு பணியை-"
நிறுத்த முடியாது!

என்ன செய்வது-
பெருமானார் (ஸல்)-
எண்ணமாக இருந்தது!

சஃபா மலையடிவாரத்தில்-
அர்கம் என்பவரின்-
வீடு இருந்தது!

அவ்வீடு-
மார்க்கத்தை ஏற்றவர்கள்-
ஒன்று கூடிட அமைந்தது!

குர் ஆன் ஓதுவதற்கும்!
சட்டங்களை விளங்குவதற்கும்!

ரசகசியமாகவே-
சந்தித்தார்கள்!

சத்தியத்தை ஏற்றதையும்-
மறைத்தே இருந்தார்கள்!

நபிகளார் மட்டும்-
வெளிப்படையாகவே-
வழிபட்டார்கள்!

நபிகளாருக்கு-
நெருக்கடியான-
சூழலிலும்!

எதிரிகளின்-
இடக்கு மடக்கான-
கேள்விகளுக்கும்!

வரும்-
சம்மட்டியான -
பதில்களும்-
ஆலோசனைகளும்!

இறை செய்தியின் (வஹ்யி)-
வாயிலாகவும்!

அதில் ஒன்று-
இடம்பெயர்தல் பற்றிய-
இறைசெய்தி வந்தது! (39;10)

பெருமானார் (ஸல்)-
அறிந்தார்கள்!

ஹபாஷா நாட்டு-
கிறிஸ்தவ மன்னர்-
நஜ்ஜாஷி -அவர்களை பற்றிய
செய்திகள்!

ஒரு-
 சிறு குழுவை-
ஹபஷாவிற்கு-
அனுப்பினார்கள்!

அதில்-
தன் மகள்-
ருகையா (ரலி)-வும்
மருமகன் உஸ்மான் (ரலி)-
அடங்குவார்கள்!

எதிரிகள்-
பிடித்திட முனைந்தார்கள்!

ஆனாலும்-
தப்பித்து -
சென்றுவிட்டார்கள்!

ஒருமுறை-
குறைஷியர்கள்-
கூடி இருந்தார்கள்!

திடீரென-
முஹம்மது (ஸல்)-
அங்கு வந்தார்கள்!

குர் ஆன் வசனங்களை-
ஓத ஆரம்பித்தார்கள்!

அதன் இனிமையையும்-
உண்மையையும் -
கேட்டவர்கள்-
தன்னை மறந்தார்கள் !

அப்போது-
அவர்களையே-
மறந்து -
இறைவனுக்கும்-
சிரம்பணிந்தார்கள் !

இதனை அறிந்த-
மற்றவர்கள்-
இவர்களை-
தூற்றினார்கள்!

இவர்களோ-
சிலைகளை-
போற்றியதாக-
புரட்டினார்கள்!

இடம்பெயர்தவர்களோ-
எதிரிகள்-
முஸ்லிமாகி விட்டார்கள்!-என
கேள்வி பட்டு!

வந்தார்கள்-
இருந்த-
 இடத்தை விட்டு!

சிலர் -
திரும்பி விட்டார்கள்-
"உண்மையை"-
அறிந்து  விட்டு!

மற்ற சிலர்களோ-
சித்திரவதைபட்டார்கள்-
மக்காவில் மாட்டிகொண்டு!

மீண்டும்-
ஒரு பெரிய குழு-
ஹபஷாவிற்கு-
பயணம்!

பிடிக்க முனைந்து-
தோல்வியால்-
எதிரிகளோ-
கடும்கோபம்!

ஊரை விட்டு-
போனவர்களையாவது-
விட்டார்களா!?

நாசக்காரர்கள்-
அவ்வளவு-
நல்லவர்களா!?

(தொடரும்...)







2 comments:

  1. நாசக் காரர்கள்
    அவ்வளவு
    நல்லவர்களா?,,,,,,,

    அதானே.... தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. வரலாறு அறி(ரி)யது! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete