Tuesday 1 April 2014

பிறந்த பூமி !(40)

உமரை, அலி சந்தித்தார்!

நீதிபதிகள் கொலையானதை சொன்னார்!

இத்தாலிக்கு செல்வதை சொன்னார்!

உமர் தொடர்ந்தார்!

''அல்கரீமி வன்முறையை கையிலெடுப்பவர்!

உங்கள் ''கதை''முடிக்கவும் துணிந்தவர்!

அதனால்தான் ஹசன் வேலைக்காரரைப்போல் நடித்து ,
உங்களை பாதுகாத்தார்!

இல்லையென்றால்,இன்று நீங்கள் முஸ்லிமாக இருக்கமாட்டீர்!

எனது தண்டனையை குறைக்க வேண்டும் என்பதில் ,எனக்கு விருப்பமில்லை!

உங்களது விருப்பத்தில் தலையிடவும் விருப்பமில்லை!

போய் ,வர எனது வாழ்த்துக்கள்!-என
பேசி முடித்தார்!
உமர் முக்தார்!

உமரின் கைகளில் முத்தமிட்டு, அலி கிளம்பினார்!

விமானம் புறப்பட்டது!

சடலங்களையும்,சில உயிர்களையும் சுமந்து சென்றது!

இத்தாலியில் செய்தி பரப்பபட்டிருந்தது!

உமர் முக்தார் மீது ,பத்திரிக்கைகள், பழிகள் பல சுமத்தி இருந்தது!

விமான நிலையத்தில் கூட்டம் கட்டுக்கு அடங்கவில்லை!

மக்கள் கோபம் வார்த்தைகளில் தெறிக்காமல் இல்லை!

விமானம் தரை இறங்கியது!

சடலங்களும் இறங்கியது!

மக்கள் கோஷமிட்டனர்!

''உமர் முக்தாரை கைது செய்த கிராசியானி  வாழ்க!

திறமையற்ற ஆட்சி செய்த லிபிய புதிய கவர்னர் ''எக்ஸிமினி'' ஒழிக!

கூட்டம் கதறியது!

முக்கியஸ்தர்களை சுமந்துக்கொண்டு வாகனங்கள் பறந்தது!

ராணுவ முகாம் அறையில் அலி தங்கினார்!

நண்பர்களை சந்திக்க தொடர்பு கொண்டார்!

அவர்களெல்லாம் முசோலினியின்
 ஆட்சியமைய உதவியவர்கள்!

கிராசியானி அழைப்பை ஏற்று வந்தார்கள்!

கிராசியானி அவர்களிடம் விளக்கினார்!

லிபிய நிலவரங்கள்!

நடக்கும் போராட்டங்கள்!

இத்தாலியர்களின் இழப்புகள்!

இப்படியாக தொடர்ந்து சொன்னார்!

இதற்கு நாளை முசோலினியை சந்திக்கனும்!

நண்பர்கள் நாமெல்லாம் பேச்சுவார்த்தையின் பலனை எடுத்துச்சொல்லனும் ,என்றார்!

சம்மதம் தெரிவித்தனர் நண்பர்கள்!

கலைந்தார்கள்!

அலி ரகசியமாக தொழுதார்!

நள்ளிரவின்போது  கதவு தட்டும் சப்தம் கேட்டு எழுந்தார்!

கதவை திறந்தார்!

வெளியில் துப்பாக்கிகளுடன் ராணுவத்தினர்!

''தேசத்துரோகம் செய்ததால் உங்களை கைது செய்கிறோம்''- என்றார் தலைமைதாங்கி வந்தவர்!

''எனது ஆடையை மாற்றிக்கொள்ளலாமா..!?-
அலி கேட்டார்!

'தலைமைத்தாங்கி' சம்மதித்தார்!

அறைக்குள் சென்றார்!

நேரம் கடந்தது!

கதவு திறக்காதிருந்தது!

சந்தேகப்பட்டு ராணுவத்தினர் முன்கதவை திறந்தனர்!

அலி அங்கே இல்லாதிருந்தார்!

பின் கதவை திறந்தனர்!

அங்கு இருட்டான திறந்த வெளி தோட்டத்தை கண்டனர்!

சினம் கொண்டு தேடினர்!

கிடைக்காததால் வெளியேறி தேடலானார்கள்!

தோட்டத்தின் இருளில் ஓரிடத்தில்தான் அலி ஒளிந்திருந்தார்!

ராணுவ விடுதி பழக்கப்பட்ட இடமானதால் இலகுவாக தப்பித்தார்!

இரவு நேர கேளிக்கை விடுதி முடியும்வரை காத்திருந்தார்!

பிறகு அக்கூட்டத்தில் கலந்து தப்பித்தார்!

நண்பர் ஒருவரது வீட்டில் அடைக்கலமானார்!

விடிந்தது!

பத்திரிக்கை வந்தது!

அலி பத்திரிக்கையை எடுத்தார்!

தலைப்புச்செய்தி தன்னை பற்றியதானதை படித்தார்!

அதில் செய்தி இப்படி வெளியாகி இருந்தது!

''தேசத்துரோகி கிராசியானி!
அவரை உயிருடன் பிடிக்க ,அல்லது சுட்டுக்கொல்ல'' -அரசு உத்தரவு!

(தொடரும்...!!)

3 comments: