Wednesday 8 February 2012

ஞாபகம் வருதே...

வட்டங்களை-
தந்து விட்டு-
அமைதி கொள்ளும் -
கல்லெறிந்த-
 கண்மாயை போல!


திறந்து விட்ட பிறகும்-
முட்டை இட-
வீட்டை தேடி வரும்
கோழிகளை போல!

உயரத்தில் பறந்தாலும்-
பூமியில் உள்ள-
"இரை" மீது-
கண் வைக்கும் -
பருந்தை போல!

பசியின் போது-
அழுது கொண்டே தாயின்-
மார்பை தேடும் -
குழந்தையை போல!

எவ்வளவு  தூரம் போனாலும்-
பிறந்த ஊரின் நினைவுகள் -
நெஞ்சில் நிறைந்து இருக்கு!
மறந்தாலும் மூச்சு விடும் -
சுவாசம் போல!

2 comments:

  1. அருமை.பிறந்த நாடு,வீடு எம்மைவிட்டுப் பிரிக்கமுடியாத உறவு.மனதை வலிக்கச்செய்யும் அந்த நினைவுகள் !

    ReplyDelete
    Replies
    1. ungal aatharavukku -
      nantri !

      hemaa avarkale!

      Delete