Thursday 23 February 2012

கள்ளியும் ! கல்லும்!

பாவையும் -
வைரமும் -
ஒண்ணுதான்!
அழகிலும்-
அடாவடியிலும்!

------------------------------------

வைரத்தை-
 விழுங்கியபோது-
கிழிந்தது-
தொண்டை குழி!

பாவையை-
 நினைக்கும்போது-
கலங்குது-
நெஞ்சுக்குழி!
----------------------------------

கருங்கல்லாக தெரிந்தது-
நான் அணிந்திருக்கும்-
வைர கல்லும்!

வைரமாக ஜொலித்தது-
அவள் அள்ளி போடும்-
உப்பு கல்லும்!
----------------------------------
கொள்ளையிட்டான்-
வெள்ளையன் -
மொகலாயர்களின்-
வைரங்களை!

பதுக்கி வைத்தானோ-?
என்னவளின் -
செவ்விதழின் உள்ளே!
-----------------------------

கல்லை செதுக்கினால்-
சிற்பம்!

சதைகளால் -
ஆன சிற்பமே!

உன் உள்ளம் மட்டும்-
கல்லோ!?

---------------------------

இறுமாப்பு கொண்டிருந்தேன்-
விலையுயர்ந்த "கற்களாக"-
என்னை!

வெறும் கூலாங்கற்காலானேன்-
உன் பார்வையின்!
பின்னே!
------------------------------
கிடப்பது தெரியாது-
தண்ணீர்-
சலவைகற்களில்!

கவலை தெரியாது-
காதலில் சஞ்சரித்தவன்-
முகத்தில்!
----------------------------------

வெடிமருந்தால்-
கற்குவியலாகும்-
மலையும்!

அரும் மருந்தாகும்-
நீ பார்க்கும்-
பார்வையும்!

--------------------------

10 comments:

  1. வைரக்கற்கள் முதல் உப்புக்கற்கள் வரை
    பாடியாயிற்று.
    ////பதுக்கி வைத்தானோ-?
    என்னவளின் -
    செவ்விதழின் உள்ளே!////
    ரசனை மிக்க வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. srawaani!
      ungal varavukku -
      karuthukku mikka nantri!

      Delete
  2. அறிவுப் பூர்வமான ஒப்பீடு
    உணர்வுப் பூர்வமான வார்த்தைகள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani ayyaa!

      ungala varavukku-
      orchaaka moottalukkum-
      mikka nantri!0

      Delete
    2. Ramani ayya
      ungal varavukkum-
      karuthukkum mikka nantri
      ayyaa!

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. //பாவையும் - வைரமும் ஒண்ணுதான்! அழகிலும்-அடாவடியிலும்!//

    பெண்கள் மேல் ஏன் இந்த கோபம். அவர்கள்தான் இந்த பூலோக வசந்தம். அவர்கள் பூ மாதிரி ஒரு சில பெண்களால் எல்லா பெண்களையும் அப்படி எண்ண தேவையில்லை என்பதே எனது கருத்து.

    ReplyDelete
    Replies
    1. puthiya thentral!

      ungal karuthukku-
      naan maru karuththu-
      solla maatten!
      en nilai paadum-
      athuthaan!

      ungaludaya karuthukkum-
      varavukkum mikka nantri!

      Delete
  5. அப்பாடி...எதை எதுக்கு ஒப்பிட்டுப் பார்த்திருக்கீங்க.அதே நேரம் பெண்கள் நாங்கள் வைரங்கள்தான் !

    ReplyDelete
    Replies
    1. hemaa!
      athil enna santhekam'!

      penkal vairamthaan!

      Delete