Tuesday 28 February 2012

தொப்புள்!"

அருட்காட்சியா?
பொருட்காட்சியா?
தொப்புளை -
காட்டாத படகாட்சியா!?
----------------------------------
பம்பரம் -
விட்டாச்சி!

ஆம்லேட் -
போட்டாச்சி!

இனி-
இடுப்புல சோறு காச்சிரவனுக்கே-
தமிழ் நாட்டு-
"ஆசி"!
---------------------------------------
வெயில் இல்லாத-
கோடைகாலமா!?

பனி இல்லாத-
வசந்த காலமா!?

தொப்புளை காட்டாத-
தமிழ் படமா!,?
--------------------------
எழுதபடுது-
இடைதானா-
இன்பகடைதானா?-என!

இடை என்ன?-
பலசரக்கு-
கடையா!?
------------------------
வயிரிலிருந்து-
இறங்குது-!
காலில் இருந்து-
ஏறுது!-
பாவாடை!

வயிரிலிருந்து-
ஏறுது!
கழுத்தில் இருந்து-
இறங்குது!-
ரவிக்கை!

இவைகள் பயணிப்பது-
எந்த "இலக்கை!?"
------------------------------
தீண்டாமை சட்டம்-
தடை பெண்கள்-
போட ரவிக்கை!

எவன் போட்டான்-
சட்டம்!
போட்டும் போடாதது போல -
ரவிக்கை- இருக்க!?
------------------------------------
அங்கங்களை மறைக்க-
உள்ளாடை போட்டு-
மேலாடை அணியப்பட்டது!

இப்ப -
உள்ளாடை தெரிய-
மேலாடை போட படுது!
------------------------------
எழுதிட பயன்பட்டது-
எலும்பு-
மரப்பட்டை!

இன்றைக்கு-
"வரைந்து" கொள்ளும்-
இடம் - இடையா!?

அது என்ன-
கரும்பலகையா!,?
----------------------------
கருவில இருக்கும்-
குழந்தை-சுவாசிக்க
உதவும் -
இடம் அது!

நாகரீகம் என்ற-
பெயரில் ஏன் படாபடுது!?
--------------------------------
பெண் என்பவள்-
மனிதகுலத்தின்-
பாகம்டா!?

ஏன்டா பாக்குறீங்க-
போகபொருளா!?
------------------------

4 comments:

  1. நான் ஏதும் சொல்ல வரல சீனி.நான் நல்ல பிள்ளைங்கோ !

    ReplyDelete
    Replies
    1. Hemaa !
      ungal varavukku-
      mikka nantri!

      naan nampuren-
      neenga nallavangathaan-
      enathu kavithai padippathe
      periya visayam-
      neenga vimarsanam pannanumnaa
      nalla manasu nichayam-
      venum!

      naan nampuren-
      neenga nallavangathaan!

      Delete
  2. meee tooo good girl

    ReplyDelete
    Replies
    1. kalai;
      naan nampuren !
      neenga nallavangathaan!

      Delete