Monday 28 January 2013

விஷ-ரூபம்!(5)

திரு,
உலக நாயகனே!

இதை எழுதுவது-
உங்கள் இஸ்லாமிய-
சகோதரனே!

எதிர்க்கவில்லை-
கமல் எனும்-
கலைஞனை!

எதிர்ப்பது-
விஸ்வரூபம் எனும்-
கலைப்படைப்பை!

மதிக்கிறேன்-
கலாம் அவர்களை!

வியந்தேன்-
ஜனாதிபதியாக-
உயர்ந்ததை!

ஆட்சேபிக்கிறேன்-
அவர் -
ஆதரிக்கும்-
அணு உலையை!

கலாம் அவர்களுக்கு-
தேச வளர்ச்சி-
முக்கியம்!

எனக்கோ-
மக்களின்-
உயிர் முக்கியம்!

இதில்தான்-
வித்தியாசம்!

பிடிக்கும்-
கலைஞர் அவர்களிடம்-
"இருந்த"-
போராட்ட குணம்!

பிடிக்கவில்லை-
"பாசத்திற்காக"-
மாறுகின்ற-
மனம்!

பிடிக்கும்-
ஜெயலலிதா அவர்கள்-
மலிவு விலையில்-
உணவு விற்க-
அறிவித்ததை!

பிடிக்கவில்லை-
இலவச பேரில்-
மக்களை சோம்பேறி -
ஆக்குவதே!

பிடித்தது-
ராமதாஸ் அவர்களை-
"டாஸ்மாக் " எதிர்ப்பு-
காட்டியது!

பிடிக்கவில்லை-
சாதி வெறி சண்டையை-
மூட்டுவது!

"பிடித்தவர்" என்பதால்-
"செய்வதையெல்லாம்-"
நியாயம் படுத்த முடியாது!

"பிடிக்காதவர்"என்பதால்-
"செய்யும் நல்லதை"-
எதிர்க்க முடியாது!

நம்ம வீடுதானே-என
கழிவறையில்-
தூங்கிட மாட்டோம்!

நடு வீட்ல-
"கழிந்திடவும்"-
மாட்டோம்!

மீண்டும்-
சொல்லிகொள்கிறேன்!

எதிர்க்கவில்லை-
கலையை!

எதிர்ப்பது-
விதிக்கப்படும்-
"நச்சு விதைகளை"!

(தொடரும்.....)




4 comments:

  1. "பிடித்தவர்" என்பதால்-
    "செய்வதையெல்லாம்-"
    நியாயம் படுத்த முடியாது!

    "பிடிக்காதவர்"என்பதால்-
    "செய்யும் நல்லதை"-
    எதிர்க்க முடியாது!
    >>
    எல்லாருமே இப்படி இருந்துட்டா பிரச்சனையே இல்லியே

    ReplyDelete
  2. உண்மைதான்! பிடித்தவர் என்பதற்காக அவர் செய்யும் தவறுகளை ஆதரிக்க முடியாதுதான்! நன்றி!

    ReplyDelete