Sunday 23 October 2011

முறையா இது!?



உனக்கே -
இது முறையா!?
நான் என்ன -
அழையா விருந்தாளியா!?

தலையை ஆட்டி ,ஆட்டி -
வர சொல்கிறாய் !

வந்த பின்னும் -
விடாமல் -
இன்னும் .இன்னும் -
என்கிறாய்!

உன் ஆசை தீர்க்காம -
நான்-
போகலாமா!?

நீயும் -
விடுவதா இல்லை!
நானும் -
ஒதுங்குவதா இல்லை!

பேராசைதான்-
 உனக்கு-
ஆசை தான் -
இல்லையா !?
-எனக்கும்!

கொட்டி -
தீர்ந்த பின் -
ஏன்-!?
சாய்ந்து விடுகிறாய்!

ஊரு-
 உன்னை குற்றம்-
சொல்லாது !
என்னை தான் -
சொல்லும்!

சாலையில்-
 சாய்ந்து போன -
மரத்தை பார்த்து !
கேள்வி கேட்டது -
மழை காற்று!

No comments:

Post a Comment