Tuesday 18 October 2011

கட்டியவளே!

பிரியமானவளே!
நான் உன் மேல் -
அதீத காதல்-
 கொண்டேன்!


ஆதலால்-
கண்ணை மூடி கொண்டு-
உன்னை கட்டி கொண்டேன்!

வாயாடி-
வம்புகாரி-என்றது 
ஊரார் பேச்சு!

பொறாமையில-
 'பொசுங்குறாங்க--என
மனசுக்கு பட்டுச்சு!

அதெல்லாம் -
உண்மைதான்னு-
இப்ப தெரிஞ்சு போச்சு!

உயிரையே கொடுப்பேன் -என்று
சொல்லி இருப்பேன்!-
காதல் மயக்கத்திலே!

மறக்காம -
நச்சரிப்பில்-
உயிரை எடுப்பது-
 என்ன -
முறையோ!?

பிடிக்கவில்லை -
மீசை-
என்றாய் !
வெட்டி கொண்டேன்!

முடியை குறைக்க -
சொன்னாய்-
சிரைத்து கொண்டேன்!

என்னால முடிந்ததை -
செய்து கொண்டேன்!

வேண்டு மென்றாய்-
வசதி வாய்ப்பு!

அதுக்காகவே-
வெளி நாட்ல-
ஓடுது என் -
வயித்து பொழப்பு!

உடம்பு வியர்வை -
சிந்தியதை விட!

ரத்தம் சிந்தி -
இருக்குதடி-
இதயம் அதை விட!

முன்னால-
உன்னிடம் பேச -
ஆவல் கொண்டு -
இருந்தவன்டி!

இப்பல்லாம் -
பேச முடியாம-
 தவிக்கிரவன்டி!

என் இதயமே-
நீயாக ஆனவளே!

அது துடிக்க -
ஆரம்பித்ததோ-
தாயோட கர்பபையில!

வந்த உனக்காக -
இருந்த
இடத்தை ஒதுக்கவா!

நீ தானே!
ஒரு தாயை[மகளை]-
பெத்து தந்தாய்!

அதுக்காக -
என்னை-
பெத்த தாயை-
 பிரியனுமா?

உன் மேல் கொண்ட -
நேசம்-
மாசு இல்ல !

உன் மேலுள்ள -
-நேசத்தால-
என் பாச தாயை பிரிய -
மனசு இல்ல !

என் அப்பனுக்கும் -
என் உம்மாளுக்கும் -
பிறந்தவங்க அஞ்சு!

வஞ்சகம் இல்லாம -
அஞ்சுக்கும்-
பால கொடுத்துச்சு-
தாயோட நெஞ்சு!

சிறகு முளைத்து-
 பறந்து விட்டது-
எல்லா குஞ்சும்!

எனக்கும் -
சிறகு இருக்கு -
அது-
பாசம் எனும் -
கட்டுல இருக்கு!

என் மேல் கொண்ட -
-நேசம்-
உண்மையானால்!

என் தாயையும் -
நேசித்து -
இருப்பாய் -
உண்மையாக!

நகக்கண் -
அடிபட்டாலும் -
கண்ணு கலங்குமடி!

கண் கலங்கி-
 நின்னப்ப எல்லாம்-
ஆறுதல் தந்தது -
என் தாயோட மடி!

கண்ணை -
குத்தி கிழிப்பது போல-
வலிக்குதடி!

கண்ணான என்தாயை -
நீ-
பிரிய சொல்லுரதடி!

உறுப்புகளை இழக்க-
துணி வாங்க -
உயிரை-
காப்பாத்த -
சக்கரை வியாதி
கூடுனவங்க!

என் தாயை இழக்க -
துணிவில்லை!

உன்னை இழக்க -
துணிந்து விட்டேன்!

பிரியமானவளாக !-
இருந்தவளே!-'
பிரியவும்'-
காரணமாக ஆனாயே.....!

No comments:

Post a Comment