Sunday 11 August 2013

இஸ்லாமும் -நபிகள் நாயகமும்!(37)

மக்காவிலிருந்து-
தாயிப் நகரம்-
அறுபது மைல்கள்!

அடிமை ஜைதுடன்-
நபிகளார்-
சென்றார்கள்!

மக்களை-
சத்தியத்தின்பால்-
அழைத்தார்கள்!

சில நாட்கள்-
அங்கு இருந்தார்கள்!

சத்தியத்தை-
ஏற்கவும்-
மறுத்தார்கள்!

இரு அணிகளாக-
நின்று கொண்டு-
அண்ணலாரை-
கற்களாலும்-
 தாக்கினார்கள்!

கேடயமாக-
ஜைது இருந்தார்!

கடும்தாக்குதலுக்கு-
உள்ளாக்கபட்டார்!

நபிகளாரும் -
தாக்கபடாமலில்லை!

இறை  உதவியால் -
அம்மக்களை-
தண்டிக்க -
வாய்ப்பு கிடைத்தும்-
தண்டிக்கவில்லை!

மக்கா -
திரும்பினார்கள்-
நபிகள் நாயகம்!

இருந்தது-
தொலைநோக்கு பார்வைகொண்ட-
பயணம்!

ஹஜ்ஜுக்கு வந்த-
மக்களுக்கு-
சத்தியத்தை-
எடுத்து சொன்னார்கள்!

எதிரிகளிடம் -
இருந்து-
தன்னை காக்கணும்-எனும்
உறுதி மொழியும் பெற்றார்!

சத்தியத்தை-
சிலர் -
ஏற்கமறுத்தார்கள்!

சிலர்-
ஏற்றார்கள்!

மதீனத்து-
மக்கள்!

தியாகத்தின்-
செம்மல்கள்!

மதீனாவில்-
பேச்சி-
நபிகளாரை பற்றியும்!

இஸ்லாத்தை பற்றியும்!

மக்காவிலிருந்து-
மதீனா-
ஐநூறு கிலோ மீட்டர்கள்!

அதனாலென்ன-
சூரிய வெளிச்ச கீற்றுகள்-
விழுந்திட-
ஏது எல்லைகள்!?

(தொடரும்...)






1 comment:

  1. //சூரிய வெளிச்ச கீற்றுகள்-
    விழுந்திட-
    ஏது எல்லைகள்!?//

    நல்ல வரிகள்....

    தொடர்கிறேன்.

    ReplyDelete