Sunday 2 October 2011

வசியக்காரியே....!



பார்பதெல்லாம் -
தெரியுதே-
பாவை உந்தன்-
 பதிப்பாக!

சாக்கடையை -
கடந்தாலும் -
பூக்கடையாக -
வாசம் வீசுதே-
உன் நினைவாலே!

என் உயிர்-
 நீ என்று -
சொன்னவளே!

சொல்லாமல் -
கொள்ளாமல்-
அதான் போனாயோ!?

புகை படம் கூட -
எடுக்க வில்லை -
உன் முகத்தை!

'புகை'படத்தில் -
வைக்கலாமோ?-
உன் முகத்தை!

உன்னை-
 என் மனதிலும்-
மாட்டி வைக்க வில்லை!

அவ்வளவு தூரம்-
என் மனம்-
சுத்தமில்லை!

எங்கு-
 நான் உன்னை-
வைக்க!?

இடம் தேடி -
அலைகிறேன்-
கால் கடுக்க!

தூக்கத்துல -
உன் பேரை-
உளறுனதை -
சொல்வேனா!?

எழுத ஆரம்பிச்சா-
உன் பேரை-
எழுதுதடி -
என் பேனா!


என்கவலை-
 கரையுது-
கண்ணீரிலே!

பேனாவின் -
கண்ணீர் தான்-
கவிதையோ...!?

2 comments:

  1. காதல் தோல்வியின் தாக்கம் அழகான கவிதையாக வந்திருக்கிறது. என் மனதில் ஒட்டிக் கொண்டது. அருமை!

    ReplyDelete
  2. sir!

    ungal varavukkum -
    karuthukkum mikka nantri!

    ReplyDelete