Saturday 8 June 2013

தேடலுடன்...தேனீ...!!(2)

ஒன்றுதான்-
வாழ்கையும்!
வாசிப்பும்!

நினைப்பதெல்லாம்-
கிடைக்காது!

கிடைப்பதில்-
பல-
இனிக்காமல்-
இருக்காது!

வாங்கி-
படித்ததில்-
பிடிக்காததும்-
உண்டு!

தானாக-
கிடைத்ததில்-
மனதை விட்டு-
அகலாததும்-
உண்டு!

அன்று-
வேலையில்லாமல்-
படித்த காலங்கள்!

இன்று-
வேலைகளின் -
இடையில்-
புத்தகத்துடன் கழியும்-
இரவுகள்!

சில புத்தகங்கள்-
நம்மை-
தூங்க செய்யும்!

மற்ற சில-
தூக்கத்தை-
கெடுத்து-
படிக்க செய்யும்!

நம் -
கைகளில்-
அடங்கும்-
புத்தகங்கள்!

நம்மையே-
விழுங்கும்-
புத்தகங்கள்!

சமீபத்தில்-
படித்த-
ஒன்றும் !

சில வருடங்களுக்கு-
முன்னால்-
படித்த-
ஒன்றும்!

என்னை-
பாடாய்படுத்துது!

அதனால்-
எழுதிட-
மனம் இயம்புது!

இவ்விரண்டில்-
ஒன்றை-
நீங்கள்-
அறிந்திருக்கலாம்!

மற்றொன்றை-
அறிய -
வாய்ப்பு-
மிக மிக-
குறைவு-
எனலாம்!

தொடருங்கள்!

இனி-
நான்-
"பட்டவைகள்!"

(தொடரும்...)





4 comments:

  1. ஏற்கனவே ஒன்றை அறிந்து விட்டோம்...

    மற்றொன்றை அறிய ஆவலுடன்...

    ReplyDelete
  2. உண்மை...
    மனதில் பதிகின்றன உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும்...
    தொடருங்கள் சகோ!...

    ReplyDelete
  3. தொடர்கிறேன்! அருமையான புத்தகம் பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய!

    ReplyDelete
  4. வாசிப்பு அனுபவங்கள் கவிதையாக..... தொடர்கிறேன்....

    ReplyDelete