Saturday 15 June 2013

தேடலுடன் ....தேனீ...!! (9)

சென்றார்கள்-
சங்கிலிகளால்-
பிணைக்கப்பட்டு!

கப்பலில்-
தள்ளப்பட்டு!

பேரிரைச்சலுடன்-
அலைகள்!

அலறல்களுடன்-
மாட்டிக்கொண்டவர்கள்!

தண்ணீரில்-
பயணம்!

கண்ணீரில்-
அவர்களின்-
துயரம்!

நெடுந்தூரம்-
செல்லனும்!

சில காலமேனும்-
உடலுடன்-
உயிரும்-
மிஞ்சனும்!

இடை இடையே-
நோய்வாய்ப்பட்டவர்கள்!

கடலுக்குள்-
வீசபட்டார்கள்!

நோயாளிகளால்-
மற்றவர்களுக்கு-
பரவிட கூடாதென-
அம்முடிவுகள்!

கரை சேர்ந்ததும்-
வரிசையாக!-
மனிதர்கள்-
விற்பனைக்காக!

சக்கையாக-
பிழிந்தாலும்-
வேலைகள் மட்டும்-
செய்வதற்காக!

பிடிபட்டவர்கள்-
அடிமைகளாக!

வாங்கி கொண்டவர்கள்-
எஜமானர்களாக!

விழும்-
 மழைத்துளிகளுக்கு-
தெரியாது-
சேரும் இடம்!

பிறக்கும்-
ஒவ்வொரு உயிரும்-
அறியாது-
வாழ்கைபயணம்!

(தொடரும்....)






4 comments:

  1. //விழும்-
    மழைத்துளிகளுக்கு-
    தெரியாது-
    சேரும் இடம்!//
    உண்மையான வரிகள். பல சேதிகளை சொல்லிவிட்டன

    ReplyDelete
  2. மனதைத் தொட்ட கவிதை......

    தொடர்கிறேன்....

    ReplyDelete
  3. கடும் பயணம்! கவிதையில் ரணம்! அருமை! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete