Thursday 27 June 2013

யாசகன்!

"அள்ளி"-
கொடுக்கவில்லை!

"கொட்டி -"
கொடுக்கவில்லை!

அப்படியெல்லாம்-
கொடுக்க -
நான்-
"அப்பா டாக்கர்"-
இல்ல!

யாசித்தாள்-
ஒரு தாய்!

யோசித்ததால்-
சிக்கியது-
"சின்னதாய்"!

கொடுத்து விட்டு-
சென்றேன்!

அவள்-
சொன்னதில்-
கண்கலங்கி -
சென்றேன்!

இறைவன்-
இன்னும் இன்னும்-
தருவான்-
மகனே!-என
சொன்னாள்!

அப்பாசவார்த்தையில்-
என்னை -
யாசகனாக்கினாள்-
அத்தாய்!

6 comments:

  1. அத்தாய் கொடுத்ததே அருள் தான்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நல்ல கவிதை....

    பாராட்டுகள் சீனி.

    ReplyDelete
  3. அழகா சொன்னிங்க.

    ReplyDelete
  4. சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
  5. யாசித்தவளின் மனம் எம்மை
    யோசிக்கவும் வைத்ததே....
    மிக அருமை சகோ. வாழ்த்துக்கள்!

    ReplyDelete