Saturday 13 July 2013

இஸ்லாமும் - நபிகள் நாயகமும்! (10)

இஸ்ஹாக் (அலை)-
அவர்களின்-
வழிதோன்றல்களை-
பார்த்தோம்!

இனி-
இஸ்மாயில் (அலை)பற்றியும்-
படிப்போம்!

தந்தை-
இப்ராஹிம் (அலை)-
கனவு வந்தது!

ஒரு முறையல்ல-
திரும்ப திரும்ப-
வந்தது!

முன்பு-
அலட்சியமாக-
இருந்தார்!

பின்பு-
இறை செய்தியென-
அறிந்தார்!

முடிவெடுத்தார்!

"முடித்துவிட"-
துணிந்தார்!

பயணித்தார்-
கூரிய கத்தியுடனும்!

பாசத்திற்குரிய-
இனிமை மகன்-
இஸ்மாயிலுடனும்!

தாய்மார்கள்-
ரத்தத்தை-
பாலாக தருகிறார்கள் !

தந்தைமார்கள் -
ரத்தத்தை-
வியர்வையாக்கி-
உழைக்கிறார்கள்!

இப்படிதானே-
அத்தனை குடும்பத்திலும்-
நடப்பவைகள்!

ஏன் இந்த-
தியாகங்கள்!

தன்-
பிள்ளைகள் மேலுள்ள-
பாசத்தால்!

தன் பிள்ளையவே-
இழக்க துணிந்தார்-
இப்ராஹிம் (அலை)-
இறைவன் மேலுள்ள-
நேசத்தால்!

இஸ்மாயில் (அலை)-
அவர்களும்-
அறிந்தார்!

அலறினாரா!?-
இல்லை-
அமைதியாக-
அனுமதித்தார்!

நபி இப்ராஹிம் (அலை)-
மகனை-
கிடத்தி விட்டு!

அறுக்கிறார்-
கழுத்தில்-
கத்தியைவிட்டு!

ஆனால்-
கத்திதான்-
அறுக்கவில்லை!

நபிக்கோ-
காரணம்-
தெரியவில்லை!

கத்தியின்-
கூர்மையில்-
பழுதில்லை!

அது-
அறுக்க சொல்லி-
இறைவனின்-
அனுமதியில்லை!

வானவர்-
வந்தார்!

சொன்னார்!

இறைவன்-
நபி இப்ராஹிம் (அலை)-ஐ
சோதித்து பார்த்ததை!

ஆடு பலியிட-
சொன்னதை!

அத்தியாகத்தின்-
அடையாளமாக-
தியாக திருநாள் !

அதுவே-
ஹஜ் பெருநாள்!

குர்பானி-எனும்
உயிர் பலிகள்!

ஆடு, மாடு,-
ஒட்டகங்கள்-
கொடுப்பவைகள்!

அறுத்த பிராணியின்-
மாமிசங்கள்-
பிராணியின் சொந்தக்காரருக்கு மட்டும்-
சொந்தமில்ல!

அதிலும்-
மற்றவருக்கு-
பங்குண்டு என்பதை-
மறுப்பதற்கில்லை!

அம்மாமிசங்கள்-
மூன்று பங்கு!

ஒன்று-
பிராணியின்சொந்தக்காரருக்கு-
பங்கு!

அவரின்-
உறவினருக்கு -
ஒரு பங்கு!

இன்னொன்று-
ஏழைகளுக்கு-
ஒரு பங்கு!

பங்கிட்டு-
வாழ்வதே-
இதன் பாங்கு!

(தொடரும்....)




4 comments:


  1. வணக்கம்!

    சீனி எழுத்துக்கள் செந்தமிழ்ச் சோலைதரும்
    தேனில் திளைத்த திரட்டு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  2. //பங்கிட்டு-
    வாழ்வதே-
    இதன் பாங்கு!//

    அருமை.... தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. அவரின்-
    உறவினருக்கு -
    ஒரு பங்கு!

    இன்னொன்று-
    ஏழைகளுக்கு-
    ஒரு பங்கு!

    பங்கிட்டு-
    வாழ்வதே-
    இதன் பாங்கு!


    அருமையாகச் சொன்னீர்கள்
    அறியாதன் அறிந்தேன்
    தினம் பத்து பதிவுகளாகப் படித்து வர
    உத்தேசித்துள்ளேன்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete