Tuesday 2 July 2013

அப்துல் நசீர் 76 !

அடித்து சென்ற-
வெள்ளத்திலும்!

தத்தளித்த-
உடமைகளிலும்!

கொள்ளை அடித்த-
கொடூரர்கள்!

அரசியல் செய்த-
அசிங்கங்கள்!

இவர்கள்-
இற்று போன-
இதயங்கள்!

தன் உயிரை-
பணயம் வைத்து-
மீட்ட-
ராணுவ வீரர்கள்!

தனி மனித-
உதவிகள்-
மெச்சதகுந்தவைகள்!

பதிரிநாத்
அருகில் இருந்த -
கிராமம்!

சூழ்ந்தது-
வெள்ளம்!

தண்ணியோடு-
போராட்டம்!

நடத்தினார்-
எழுபத்தாறு வயது-
இளவட்டம்!

இருநூறு பேரை-
நீந்தி -
காப்பாற்றி உள்ளார்!

அப்துல் நசீர்-எனும்
பெரியவர்!

உதவிட-
முக்கியமா.!?
பதவியும்!
அதிகாரமும்!

அதை விட-
முக்கியம்-
நல்ல மனம்!

பெரியவரே!

உங்களை -
போன்றவர்கள்தான்-
மதிப்புக்குரியவரே!

// தகவலுக்கு நன்றி -
வைகறை முகநூல் பக்கத்திற்கு//




3 comments:

  1. // அதை விட முக்கியம் நல்ல மனம்...! //

    அது தான் வேண்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமை! அருமை! வாழ்த்துவோம்! பாராட்டுவோம் அந்த பெரியவரை! நன்றி!

    ReplyDelete
  3. நல்ல மனம் கொண்ட அப்பெரியவரை வாழ்த்துவதில் நானும் சேர்ந்து கொள்கிறேன்.....

    ReplyDelete