Wednesday 30 January 2013

ஹபீப்-குர்சியத்!(1)

2013-
சனவரி-
இருபத்திமூன்றாம் தேதி!

இரவு -
நேரமது!

அலைபேசி -
அலறியது!

அது-
அலறல் செய்தியை-
தாங்கி வந்தது!

மறு முனையில்-
என்னுடன்-
பிறந்தவன்!

படபடப்புடன்-
அச்செய்தியை-
சொன்னவன்!

மேகங்கள்-
வானில் மிதக்கவே-
செய்கிறது!

அத்தகவலை-
கேட்டபின்-
என் நிலை -
நிலைகொள்ளாமல் ஆனது!

ஹபீப்-
உன்அலைபேசிக்கு-
அழைத்தேன்!

சிறிது-
நேரத்திற்கு பின்னே-
எடுத்தாய்!

பேசிடமுடியாமல்-
தவித்தாய்!

பின்புறத்தில்-
அழுகை-
சப்தம் கேட்டேன்!

"உறுதியென-"
அறிந்தேன்!

ஹபீப்-
உன்னை காணவே-
விரைந்தேன்!

நெஞ்சில்-
இமயத்தின்-
பாரத்தை-
சுமந்தேன்!

நாம்-
அழுததில்லை!-
எத்தனை முறை-
தோற்றும்!

அன்று-
கண்ணீரை-
 மறைக்க முடியாமல்-
தோற்றோம்!

ஹபீப் -
"உன்னவளுக்காக"-
எவ்வளவோ-
இழந்தவன்-
நீ!

இன்று-
"உன்னவளையே"-
இழந்து நிற்க்கிறாயடா-
நீ!

உலகம்-
ஒரு நாள்-
"இவ்வெழுத்தை"-
படிக்கலாம்!

உன் நேசத்தையும்-
என் பாசத்தையும்-
அறியலாம்!

எத்தனையோ-
காவியங்கள்-
இவ்வுலகில்-
உண்டு!

எழுதுகிறேன்-
நம் வாழ்வையும்-
பகிர்ந்து செல்வோமே-
என்று!

(நினைவுகள் சுழலும்....)





6 comments:

  1. தொடருங்கள்! தொடர்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. suresh sako!

      ungal thodaruthalukku mikka nantri !

      Delete
  2. Replies
    1. kuttan!

      aamaam sako....!

      varavukku mikka nantri!

      Delete
  3. ஒரு அதிர்ச்சியோடு துவங்கியிருக்கது கவிதைத் தொடர்.... தொடர்கிறேன்.....

    ReplyDelete