Sunday 14 July 2013

இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(11)

கஃபதுல்லா -எனும்
இறை இல்லம்!

புனித ஆலயம்!

மக்காவில்-
இருக்கும்-
அவ்விடம்!

உலக முஸ்லிம்கள்-
நோக்கி தொழும்-
அதே இடம்!

இன்று-
நேற்று-
அது-
உருவாகியதில்லை!

முகம்மது நபி (ஸல்)-
அவர்களால்  மட்டும் -
உருவாக்கியதில்லை!

அப்போ -
அப்போ-
புனரமைக்கப்பட்டது!

அது-
ஆதம் (அலை)-
அவர்களாலே -
கட்டப்பட்டது!

நூஹ் நபி (அலை) அவர்கள் -
காலத்து வெள்ளத்தில் -
சிதிலமடைந்தது!

பிறகு -
நபி இப்ராஹிம்-(அலை)
அவர்களாலும்!
இஸ்மாயில் (அலை)-
அவர்களாலும்-
புதுபிக்கபட்டது!

உலக முடிவு நாளில்-
இறைவன் அனைவரையும்-
ஒன்றிணைப்பான்!

நியாய தீர்ப்பு -
அளிப்பான்!

"ஒன்று  கூடுவது"-
முடியாதென்பான்-
மனிதன்!

இப்போது-
உலகிலுள்ள-
"எல்லாவிதமான"-
மக்களையும்-
ஒன்றிணைக்கவில்லையா!?-
இறைவன்!

இப்போது-
நடத்தியவன்!

அப்போது-
மட்டுமா!?-
முடியாதவன்!

"இதுவென்று" இல்லாத-
நம்மை -
படைத்தவன்!

இறந்தபின் மட்டும்-
உயிர்பிக்க முடியாதவனா!?-
அவன்!

இப்போது-
சொல்லுங்கள்!

நபிகள் நாயகம்-
முஹம்மது (ஸல்)-
அவர்களென்ன-
புதிதாகவா -!?
சொல்ல வந்தார்கள்!

இதற்கு -
முன்னிருந்த-
தூதர்களையும்-
வேதங்களையும்-
உண்மைபடுத்தவே-
வந்தார்கள்!

இனி-
நான் எடுத்திருக்கும்-
ஆதார நூலும்!

நாயகத்தின்-
வரலாறும் !

(தொடரும்...)

5 comments:

  1. அருமை... ஆதார நூலின் வரலாற்றை அறிய தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. அருமை.... தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்.

    ReplyDelete
  3. இனி-
    நான் எடுத்திருக்கும்-
    ஆதார நூலும்!
    நாயகத்தின்-
    வரலாறும் !//

    ஆர்வமுடன் தொடர்கிறேன்

    ReplyDelete