Thursday 1 March 2012

கடல்!

தந்து இருக்கிறாய்-
கவிதைகளை!

முடித்து இருக்கிறாய்-
பலரின் " கதை"களை!
-----------------------------
நீதான்-
தாலாட்டும்-
ஒப்பாரியும்-
மீனவனுக்கு!
--------------------
இருக்கு-
வழி உன்னுள்-
உழைக்க முயற்சிப்பவனுக்கு!

வாழ்வது கூட-
பெரிய தலைவலி-
உழைக்காதவனுக்கு!
----------------------------
மறக்கவில்லை-
நீ தந்த "அழிவை"!

உன்னை மிஞ்சி விடும்-
மனுசனுங்க-செய்யுற
கொலை!
----------------------------
தத்துவம்-
சொல்லுது-
கடலும் -தொடுவானும்!

லட்சியம் கொண்டவன்-
வெற்றியை நோக்கி-
முயல்வதே முக்கியம்!
------------------------------
சோதனை என்கிறான்-
ஊருக்குள் கடல்-
தண்ணி வந்தால்!

சாதனை என்கிறான்-
மக்களை மது கடலில்-
தள்ளி கிடைக்கும்-
வருமானத்தை!
----------------------------
எத்தனை உயிரினம்-
உன்னுள்ளே!

எச்சமிடும் பறவைகளை-
நீ-
பொருட்படுத்துவதே-இல்லை!
--------------------------------------
நல்லவேளையாக-
உனக்கு மொழி -
தெரியவில்லை!

என் மீனவ தாய்கள்-
கணவனை இழந்து-
கதறும்போது-எத்தனை
முறையோ !-வந்துருக்கும்
உன் ஆழிபேரலை!
------------------------------
பிளைட் புடிச்சி -
போவாங்க பதவி-
"வாங்க!"

சுட்டு சாகும்-
மீனவ குடும்பத்தை-
எட்டி கூட பாக்க-
மாட்டாங்க!
--------------------------
"ஜோடி ஜோடியா-"
வருவாங்க -
உன்னை காண!

"ஜோடி மாறி வருவாங்க-"
வெட்கம் இல்லாமல்-மீண்டும்
உன்னை காண!
---------------------------
நீ-
நடத்தாத பாடமா!?-
"புத்தி "படிக்க மறுப்பவன்-
மனித ஜென்மமா!?

நேற்று-
ஜப்பானின் -
புகிஷிமா!

நாளை என்ன?-
கூடங்குளமா!?
----------------------

10 comments:

  1. Replies
    1. kalai;
      ungaludaya oththulaippukku-
      mikka nantri!

      melum ungaludaya aatharavaiyum-
      "karuthukkalaiyum"-
      ethir paarthu irukkiren!

      Delete
  2. உங்கள் எண்ணங்கள்கூட கடல் அலைக்கு ஒப்பானதுதான் சீனி.இயற்கைக்கும் கோபம் வருகிறது மனிதனின் அட்டகாசத்தால் !

    ReplyDelete
    Replies
    1. Hemaa!

      ungaludaya karuthukku-
      mikka nantri!

      Delete
  3. நீதான்-
    தாலாட்டும்-
    ஒப்பாரியும்-
    மீனவனுக்கு! /


    கடல் குறித்த தொடர் சிந்தனை
    உள்ளம் கொள்ளை கொண்டது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Ramani ayya!

      ungaludaya karuthukku-
      mikka nantri !

      ungaludaya vimarsanam-
      enakku vimosanam!

      Delete
  4. பிளைட் புடிச்சி -
    போவாங்க பதவி-
    "வாங்க!"

    சுட்டு சாகும்-
    மீனவ குடும்பத்தை-
    எட்டி கூட பாக்க-
    மாட்டாங்க!
    அருமையான வரிகள்

    ReplyDelete
  5. seenu unga karuvachik kavithai ,kannu kannu kavithai yum tamil thottathil pottu irukken...
    ellarum supernu solli irukanga ...vaazthukkal

    ReplyDelete
    Replies
    1. kalai;
      ungalukku eppadi nantri-
      solvathunnu theriyala!

      ethu eppadiyo..
      rom...............pa nantri!

      Delete