Saturday 31 March 2012

நிலவு!

உன்னை எழுதாத-
கவிஞனா ?

உன்னை-
எழுதாதவனும்-
கவிஞனா?
----------------
அன்று -
உன் வெளிச்சமே-
என் வீடானது!

இன்று-
கோழி கூடை போல-
அடுக்கு மாடி-
கூடு ஒன்றில்-
வாழ்வது!

இதில் எங்கே-
நாகரிக மேதாவிகள்-
உன்னை ரசிப்பது!?
-----------------------
அந்த நாளில்-
சுக்ரன்-
புதன்-
சனி-
எல்லோரும் வாராங்க-
கல்யாணம் வேண்டாம்-
ஜோசியக்காரன்!

கல்யாணம் என்றால்-
நாலு பேரு வரத்தான்-
செய்வாங்க-
கோபத்தில்-
மாப்பிள்ளைகாரன்!
-------------------------
நீண்ட இருளில்-
ஒளி வீசும்-
நிலவு!

நிலவிலே கறையை-
பார்ப்பவன்-
மனம் தான்-
முடவு!

மகிழ்கிறான்-
அடுத்தவரிடம்-
நிறையை பார்ப்பவன்!

நிம்மதி இழக்கிறான்-
அடுத்தவன் குறையை-
துருவி காண்பவன்!
---------------------
எழுத்தை படித்தால்-
எழுதியவனை-
தேடுகிறானே!

பிரமாண்ட-
கட்டிடத்தை கண்டால்-
கட்டியவனை -
அறிய தேடுகிறானே!

அழகிய நிலவே-
உன்னை படைத்தவனை-
அறிந்திட மறுக்கிறானே!
---------------------
மறையும்-
வரும்-
வெண்மதியும்!
நீதியும்!

வலுபெற்று -
இருக்கிறது -
இன்று-
அநீதி!

ஒரு நாள்-
அறுத்தெறியும்-
நீதி!
------------------
புழுதிகள்-

மேகங்கள்-

கிரகணங்கள்-

தற்காலிகமாக-
மறைக்கலாம்-
நிலவினை!

இழி சொற்கள்-

கேவலங்கள்-

அவமானங்கள்-

நிரந்தரமாக-
தடுத்திடாது-
லட்சியம்-
கொண்டவனை!
---------------------

9 comments:

  1. கவிதைக்கான கரு கிடைத்தவுடன் அதன் நுனி பிடித்து
    சர சர வென உச்சம் ஏறும் தங்கள் சிந்தனையின்.மனம் வேகம்
    பிரமிக்க வைக்கிறது கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ayya!
      ungal varavukkum
      karuthukkum mikka nantri!

      Delete
  2. நல்ல கவிதைகள் நண்பா

    ReplyDelete
    Replies
    1. seuythali!
      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  3. சகோதரரே அருமை
    ///அந்த நாளில்-
    சுக்ரன்-
    புதன்-
    சனி-
    எல்லோரும் வாராங்க-
    கல்யாணம் வேண்டாம்-
    ஜோசியக்காரன்!

    கல்யாணம் என்றால்-
    நாலு பேரு வரத்தான்-
    செய்வாங்க-
    கோபத்தில்-
    மாப்பிள்ளைகாரன்!///

    ஹா ஹா கவிதையின் ஊடாக நகைச்சுவை துனுக்கா

    ReplyDelete
    Replies
    1. sako!

      ungal varavukkum -
      karithukkum mikka nantri!

      Delete
  4. //அழகிய-
    நிலவே-உன்னை
    படைத்தவனை-அறிந்திட
    மறுக்கிறானே!//

    ;)))))

    ReplyDelete
  5. ஆகா...கல்யாண நகைச்சுவை.சூப்பர் சீனி !

    ReplyDelete
    Replies
    1. Hemaa !
      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete