Tuesday 26 November 2013

பத்து லட்சம்....!!

ஆண் பெண்-
நட்பென்பது-
வளர வேண்டிய -
மரமாகும்!

அதனை -
மறுப்பது-
மடத்தனமாகும்!

பிரிந்திருந்தால்-
பிற்போக்கு தனம்!

கட்டுப்பட்டிருந்தால்-
காட்டுமிராண்டி தனம்!

இப்படியாக-
எத்தனையோ-
வியாக்கியானம்!

தற்போதைய-
ஒரு-
சம்பவம்!

பத்து லட்சம்-
கேட்டான்-
ஒருவன்!

மறுத்தால்-
"உறவை"இணையத்தில்- 
வெளியிடுவேன்-
என்றான்!

யார்-
இவன்!?

ஒரு பெண்ணை-
மணந்தவன்!

மனைவியின்-
"அந்தரங்கதிற்குதான்-"
விலை பேசினான்!

கைது-
 செய்யப்பட்டுள்ளான்!

கட்டியவனே-
வில்லனாக-
மாறுகிறான்!

"கண்டவனுடன்"-
சுற்றுவது-
பெண்ணுரிமை என்கிறோம்!

எங்கோ-
நடந்த ஒன்னு-என
அலட்சியம் செய்வோம்!

எங்கோ நடக்கும்-
திருட்டிற்கு-
நாம் ஏன் -
பணத்தை-
வங்கியில் போடுகிறோம்..!?

5 comments:

  1. முதல் 11 வரிகளியும் படித்து அதிர்ந்து தொடர்ந்து மகிழ்ந்தேன்.கவிதை நன்று சகோ.

    ReplyDelete
  2. அதிர்ச்சி தரும் செய்தியை கவிதையாக்கி இருக்கீங்க......

    எத்தனை விதமான மனிதர்கள்....

    ReplyDelete
  3. அடப்பாவி (கள்)... முடிவில் நல்ல கேள்வி...!

    ReplyDelete
  4. சலாம் சகோ

    //எங்கோ நடக்கும்-
    திருட்டிற்கு-
    நாம் ஏன் -
    பணத்தை-
    வங்கியில் போடுகிறோம்..!?//

    நச்சென்று நெருப்பு போன்ற வரிகள்....பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  5. கவிதையும் அதில் பொதிந்திருக்கும் சிந்தனைக்கருத்துக்களும் அருமை!

    ReplyDelete