Wednesday 27 November 2013

சங்கரராமா..!!

கத்திகளும்-
அரிவாள்களும்-
இரை தேடியது!

ரத்தத்தை -
சுவைத்து-
பசியாறியது!

பின்னர்-
புரிந்தது!

தானாக-
ஆயுதங்கள்-
வரவில்லை!
வரவழைக்கப்பட்டது!

ரத்தம் சிந்திய-
ஆத்மாவும்-
நியாயங்களை-
பேசி இருந்தது!

ரத்தக்கறைகளை-
துடைக்க முனைகையில்-
நாற்றங்கள் வந்தது!

முறைகேடுகள்!
முறையற்ற உறவுகள்!-
இப்படியாக தொடர்ந்தது!

தீர்ப்பு வந்தது!

நியாயம் தேடிய-
 கண்கள்-
"திரு திருவென"-
முழிக்கிறது!

சங்கரராமா..!
உயிரற்று போனாய்!

உன் உதிரங்களால்-
உண்மைகளை-
முளைபிக்க செய்தாய்!!

4 comments:

  1. அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete
  2. சூழலுக்கேற்ற சூடாகப் பதிவிட்டப் பதிவு அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சுடச்சுட கவிதை.

    ReplyDelete