Wednesday 6 November 2013

தோற்றவள் நீயடி...!!

அழகான-
ஆடை பூண்டிருந்தாய்!

அழகு ஒப்பனையை-
கூட்டி இருந்தாய்!

நம் பிரிவு-
உன்னை-
வாட்டவில்லை-என்பதை
உணர்த்திட வந்தாய்!

ஆனாலும்-
நீ தோற்றாயடி!

கண்ணீர் கரைதிருந்த-
உன் கண் மையை-
கவனிக்க மறந்திருந்தாயடி!

3 comments:

  1. கரைத்திருந்த?

    நல்ல கவிதை. என்னதான் மறைத்தாலும் உண்மை வெளிவந்திடும்தானே!

    ReplyDelete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete