Thursday 7 November 2013

இசை ப்ரியா!

வஞ்சகம் இல்லாமல்-
வந்து-
விழுந்தது-
குண்டுகள்!

இரக்கமின்றி-
எரித்தது-
ஏவுகணைகள்!

சீறி சென்றது-
துப்பாக்கி-
தோட்டாக்கள்!

எங்கும்-
ரத்தக்களம்!

எங்கெங்கும்-
மரண ஓலம்!

முட்கள் குதிடாத-
கால்கள்-
உண்டோ!?

சடலத்தை மிதித்து -
நடக்காத கால்களும்-
"அன்று"-
உண்டோ!?

சிதறி கிடந்த-
சதை துண்டுகள்!

அதனுடன்-
ஒட்டி இருந்த-
எலும்புகள்!

ரத்தமாக-
காட்சி தந்த-
தண்ணீர் தடாகங்கள்!

ரத்த சகதியான-
நிலங்கள்!

எங்கும்-
முக்கல்கள் -
முணங்கல்கள்!

அவர்களின்மேல் -
ஏறிய-
பீரங்கி வாகனங்கள்!

என் நிலை-
இவைகளுக்கும்-
மேலாக!

கிடந்தேன்-
கண்ணீர் கடலில்-
தத்தளித்தவளாக!

மாட்டினேன்-
ஓநாய்களிடம்-
வெள்ளாடாக!

துடித்தேன்-
பாலையில்-
விழுந்த-
மீனாக!

தவித்தேன்-
மானம் இழந்தும் -
மரிக்காத-
கவரி மானாக!

என் கதறல்கள்-
இருந்திருக்கிறது-
காம வெறி நாய்களுக்கு-
கிளர்ச்சி ஊட்டுபவைகளாக!

மானம்-
மறைக்க-
ஆடைகள்-
தைத்தோம்!

ஆடைகளை-
காக்கவே-
ஆயுதங்கள்-
தரித்தோம்!

என்னை-
எச்சை படுத்தியது-
வெறி நாய்கள்!

எச்சையிலும்-
இச்சை கொண்டது-
சொறி நாய்கள்!

என் கதறல்கள்-
வேட்டை நாய்களின்-
கொக்கரிப்பில்-
கரைந்தது!

உள் நாட்டு விவகாரம் என-
உலகமும்-
மௌனித்தது!

மூச்சை நிறுத்தியவர்கள்-
மூக்கில் பஞ்சை-
வைக்கிறார்கள்!

"எனக்கென்ன "!?-என
வாழ்பவர்கள் -
காதில் பஞ்சை-
வைத்து கொள்கிறார்கள்!

ஓ!
உறவுகளே!
துடித்த-
 என் இதயம்-
துடிப்பதை-
நிறுத்தி விட்டது!

எனக்கான-
நிலைக்கு-
உங்கள் இதயங்கள்-
துடிக்க வேண்டியுள்ளது!

1 comment: