Monday 4 November 2013

சிந்தனை காடு...!!

இனிப்பை-
தேடிவரும்-
எறும்புகளை போல்!

பெண்களின்-
கூந்தலில்-
அழகூட்டும்-
மல்லிகைகள் போல்!

எண்ணம் எனும்-
கருவை -
சுமந்து கொண்டு!

சிந்தனை காட்டில்-
நுழைவேன்-
வார்த்தைகளை-
தேடிக்கொண்டு!

வார்த்தைகள்-
தேனடை மொய்க்கும்-
தேனீக்கள் போல்-
மொத்தமாக வந்து-
திணறடிக்கும்!

பல நேரங்களில்-
மாய மானைப்போல்-
மாயமாக-
மறைந்திடும்!

திணறடித்தாலும் -
மாயமானாலும்-
தேடல் தொடர்கிறது!

சிந்தனை காட்டில்-
உலாவுவது-
எனக்கு-
பிடிக்கிறது!


4 comments:

  1. நீங்கள் சிந்தனைக் காட்டில் உலவ - அதனால் பிறந்த கவிதைகளைப் படிக்க எங்களுக்கும் பிடிக்கிறது.

    தொடரட்டும் உலா.... மலரட்டும் கவிதைகள்.

    ReplyDelete
  2. வாவ்! மிக அருமை!
    //வார்த்தைகள்-
    தேனடை மொய்க்கும்-
    தேனீக்கள் போல்-
    மொத்தமாக வந்து-
    திணறடிக்கும்!

    பல நேரங்களில்-
    மாய மானைப்போல்-
    மாயமாக-
    மறைந்திடும்!// உண்மைங்க!!!!

    ReplyDelete
  3. உவமைகள் இனிது இனிது...

    ReplyDelete
  4. சிந்தனைக்காடு! அருமை! உலாவுங்கள்! அற்புதங்களை பிடித்து எங்களுக்கு பகிருங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete