Sunday 24 November 2013

வெள்ளை புறா...!!

முத்தம்-
கொடுப்பவரையும்-
பெறுபவரையும்-
பொருத்துதான்-
அர்த்தம் தரும்!

அதுபோலாகவே-
சமாதானத்தின்-
பொருள்கொண்டதுதான்-
வெள்ளை புறாவும்!

ரத்தைகறைக்கொண்ட-
கைகளும்-
புறாவை பறக்கவிடுகிறது!

சமாதானம் எனும்-
சொல்லில்கூட-
ரத்த வாடை -
அடிக்கிறது!

3 comments: