Wednesday 13 November 2013

திரு.கமல் அவர்களே...!!

மிதக்கிறது-
மீனவர்கள்-
சடலங்கள்!

கயிறுகள்-
காவு கொள்கிறது-
விவசாயிகள்-
கழுத்துக்கள்!

"தள்ளாடுது"-
தமிழ்நாட்டின்-
தன் மானங்கள்!

இவைகளுக்கு-
ஓரணியில் போராடவேண்டியது-
மக்கள்!

ஆனால்-
மறந்தார்கள்!

மறுக்கிறார்கள்!

ஆனால்-
விஸ்வரூப-
விவகாரத்திற்கு!

கமல் விட்ட-
ஒரு சொட்டு-
கண்ணீருக்கு!

தமிழ்நாடே-
தகித்தது!

அரசியல் -
ஆதாயத்திற்காக-
நரிகள் -
நடித்தது!

"காவிகளும்"-
கருத்துரிமையை பற்றி-
பேசியது!

இவையெல்லாம்-
கமல் நடிப்பையே-
மிஞ்சியது!

எங்கே-
கருத்து சுதந்திரம் -
பேசிய-
சுந்தர புருஷர்கள்!

யோக்கியர்கள்..!!!!!!?

இன்று-
சுய சரிதை -
எழுதுகிறார்-
சரிகா அவர்கள்!

அதனை-
எதிர்கிறார்-
கமல் அவர்கள்!

கமல் அவர்களே!
ஊரான் தோலை-
உரிப்பது-
கருத்து சுதந்திரம்!

உங்கள்-
தோலை (கதை) உரிக்கும்போது-
வலிக்கும்!

இப்படிதானே-
இருக்கும்!

மற்றவர்களுக்கும்!!!


No comments:

Post a Comment