Tuesday 5 November 2013

மொழி!

கடலலைகளின்-
மொழி!

ஆழ்கடலில்-
மௌன மொழி!

பனிகால -
இரவின்-
நிசப்த மொழி!

மழைக்கு முன் வரும்-
ஈரப்பசை-
காற்றின் மொழி!

மலைத்தொடர்களில்-
சல சலக்கும்-
இலைகளின் மொழி!

குழந்தைகளின் -
கோப பார்வையின் மொழி!

இத்தனையும்-
தெரியாத மொழி!

ஆனாலும்-
அதில்-
குறைகிறது -
மனதின் வலி!

தெரிந்த மொழியைகொண்டு-
நஞ்சுக்களும்-
பாய்ச்சபடுகிறது-
வார்த்தைகளின் வழி!

4 comments:

  1. தெரிந்த மொழியைகொண்டு-
    நஞ்சுக்களும்-
    பாய்ச்சபடுகிறது-
    வார்த்தைகளின் வழி!

    அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கடைசி வரிகள்...... நிதர்சனம்......

    தொடர வாழ்த்துகள் சீனி.

    ReplyDelete
  3. //தெரிந்த மொழியைகொண்டு-
    நஞ்சுக்களும்-
    பாய்ச்சபடுகிறது-
    வார்த்தைகளின் வழி!// உண்மை!
    அருமையான கவிதை சீனி!

    ReplyDelete
  4. மொழியின் வழி ...
    சூப்பர்

    ReplyDelete