Saturday 19 November 2011

மேம்பாலம்!



நிலங்கள்-
 பல  கடந்து -
கடலில் கலக்கிறது-
நதி!

அதே போல் -
எங்கெங்கோ -
தோன்றிய -
ஆணும்-பெண்ணும் -
காதலில் தொடங்கி -திருமணத்திலோ!

திருமணத்தில்-
 தொடங்கி -
காதலுடனோ-
கலக்கிறார்கள் -
வாழ்கை எனும் -
கடலில்!

தொடங்குவதாக -
தோன்றும்-
திருமண வாழ்வு-
இனிதாக !

தொடர்கிறதா?-
-வாழ்வு
இனிதாக!?

கடலில் -
புயல் மையம் 
கொள்வதுண்டு!

காலை வருடும் -
அலைகளும் உண்டு!

ஆளை காலி செய்யும்-
ஆழி பேரலையும் உண்டு!

வாழ்க்கையிலும்-
ஈகோ -என்ற ஈன புத்தியும் -
பேராசை எனும் பேயும் -
வருவதுண்டு!

இயற்கை சீற்றத்தால்-
நிலங்கள் மறைவதுண்டு!-
மணல் திட்டுகள் -
தெரிவதுண்டு!

மணவாழ்விலும் -
மன சஞ்சலங்களினால் -
ஒரே வீட்டில் வாழ்ந்தாலும்-
தீவுகளை போல் -
பிரிந்தே இருக்கும் -
வேளையில்!

தீவுகளை இணைக்கும்-
மேம்பாலங்களை போல்!

பிரிந்தே இருக்கும் -
தம்பதிகளை-
 இணைக்கும்  பாலமாக -இறைவன் அமைத்தான்
''குழந்தைகளை!''

No comments:

Post a Comment