Tuesday 15 November 2011

குடி மகனே!



குடிகாரனுக்கு!-
கண்ணை சொருகுது-
போதையிலே!

குடும்பத்துக்கு-
கண்ணை சொருகுது-
பசியில!

இவன்-குடிச்சிட்டு
உணர்வற்று -கிடக்குறான்
தெருவுல!

புள்ள குட்டிக -பசியில
வாடுது -அவன்
வீட்டுல!

உழைச்சி,உழைச்சி -
ஓடா தேயிறவனே!

குடிச்சி ,குடிச்சி-
ஒன்னும் இல்லாம -
போறவனே!

ஒத்த வரியில சொல்லிடலாம்-
''குடிகாரன்'-என்ற சொல்லிலே!

மொத்தமா விக்கிறவன் -உலா
வருகிறான்-'தொழிலதிபர்'என்ற
பெயரிலே!

சக மனிதனை -
வாழ வைப்பவன் -
மனிதன்!

சக மனிதனை -
சாக வைப்பவனும் -
மனிதனா!?

No comments:

Post a Comment